ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி
2020-10-27@ 00:18:25

ஆவடி: அம்பத்தூர் தொழிற்பேட்டை புளியமரம் பஸ் நிறுத்தத்தில் தனியார் வங்கி ஏடிஎம் உள்ளது. இங்கு காவலாளி கிடையாது. நேற்று அதிகாலை மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் மையத்தில் புகுந்து எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து ஹைதராபாத்தில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் உடனடியாக அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசாரை தொடர்பு கொண்டனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதனை பார்த்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். பின்னர், போலீசாரும், வங்கி அதிகாரிகளும் உள்ளே சென்று பார்த்தபோது, ஏடிஎம் எந்திரத்தில் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும், அதில் இருந்த பணத்தை கொள்ளை அடிக்க முடியாமல் மர்ம நபர் தப்பிச்சென்றது தெரியவந்தது.
மேலும் செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை விமான நிலையத்தில் எலக்ட்ரீஷியன் கைது
அரசு ஊழியர் வீட்டில் 45 சவரன் திருட்டு
கோயில், சர்ச், வீடு உள்பட 8 இடங்களில் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை
பேஸ்புக் மூலம் நட்பாக பழகி நூதன முறையில் வழிப்பறி: 4 பேர் கைது
வியாசர்பாடி காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு
தி.நகரில் உள்ள பிரபல நகை கடையில் 5 கிலோ தங்கம் திருட்டு: வடமாநில ஊழியருக்கு வலை
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!