வழிப்பறி சகோதரர்கள் கைது
2020-10-27@ 00:18:22

ஆவடி: திருநின்றவூர், மண்டபம் தெருவை சேர்ந்தவர் ஜீவரத்தினம்(22). கடந்த மாதம் 29ந்தேதி பட்டாபிராம் இந்து கல்லூரி அருகில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேர் அவரை வழிமறித்து கையில் வைத்திருந்த செல்போனை பறித்து தப்பினர். இதுகுறித்து புகாரின்பேரில் பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக, பாலவேடு நாசிக் நகர் பவானி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாரதி(24) மற்றும் அவரது தம்பி மணிகண்டன்(22) ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் இருவரும் பல்வேறு இடங்களில் கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடித்தல் மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் இருந்து 5 சவரன் தங்கச்சங்கிலி, 3 செல்போன்கள் மற்றும் ஒரு பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் செய்திகள்
துபாயில் இருந்து தங்கம் கடத்திய 3 பேர் கைது: ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
அத்தையின் நகையை திருடியவர் நண்பருடன் கைது
வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை
பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற டிரைவர் கைது
அதிகரிக்கும் ஆன்லைன் மோசடிகள் மொபைல் போன் செயலி மூலம் ரூ.80 ஆயிரம் மோசடி
திருக்கழுக்குன்றம் அருகே எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு: 4 பேருக்கு வலை
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!