கடைகளில் கொள்ளை
2020-10-27@ 00:18:20

ஆவடி: ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள தனியார் டி.வி டிஷ் சர்வீஸ் சென்டரில் நேற்று காலை கதவை உடைத்து அங்கிருந்த எல்.இ.டி டிவி, லேப்டாப் ஆகிவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதேபோல் ஆவடி கன்னிகாபுரம் காந்தி தெருவில் உள்ள கடையின் ஷெட்டரை உடைத்து 300 பால் பவுடர் பாக்கெட்கள், ஐஸ் கிரீம் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதேபோல், திருமுல்லைவாயல் வைஷ்ணவி நகர் 2வது தெருவில் உள்ள மளிகை கடையில் பூட்டை உடைத்து கல்லாப் பெட்டியில் இருந்த ரூ.1,500 ரொக்கம் மற்றும் மளிகை பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து புகாரின்பேரில் ஆவடி, திருமுல்லைவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
30 நிமிடத்தில் ரூ.3,000 சம்பாதிக்கலாம் : மோசடி கும்பல் 12 பேர் கைது
மூதாட்டி கொலை இருவர் கைது
தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் பலத்த வெட்டு காயங்களுடன் ஓடிவந்து வாகன ஓட்டிகளிடம் உதவி கேட்ட வாலிபர்
எளாவூர் சோதனைசாவடியில் 15 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது
தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் பழிக்குப்பழியாக வாலிபருக்கு சரமாரி வெட்டு: வெட்டுக் காயத்துடன் உயிர் தப்பினார்
சூதாட்டம், மது விற்பனை கோவையில் பாஜ பிரமுகர்கள் உள்பட 86 பேர் கைது
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்