நாகையில் 149 கொள்முதல் நிலையமிருக்க 2 இடத்தில் மட்டும் மத்திய குழு ஆய்வு: விவசாயிகள் கொந்தளிப்பு
2020-10-25@ 01:02:17

நாகை: நாகை மாவட்டத்தில் 149 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இரண்டு கொள்முதல் நிலையத்தை மட்டுமே ஆய்வு செய்துவிட்டு மத்திய குழு சென்றது. இதனால், விவசாயிகள் கொந்தளித்துள்ளனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு குறுவை சாகுபடி நடந்துள்ளது. 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்ய மூட்டை ஒன்றுக்கு ரூ.40 லஞ்சம் பெறப்படுவதை தடுக்கவேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். இந்நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்ய மத்தியகுழு அனுப்பி வைக்கப்பட்டது. இதன்படி, மத்திய உணவு மற்றும் தரக்கட்டுப்பாட்டு அதிகாரி யாதேந்திரஜெயின் தலைமையிலான குழுவினர் நேற்று நாகைக்கு வந்தனர்.
கீழ்வேளூர் தாலுகா சாட்டியக்குடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்தனர். பின்னர், மூட்டைகளில் ஊசி மூலம் நெல்லை பரிசோதனைக்காக எடுத்தனர். அவ்வாறு சேகரித்த தகவல்களை நெல்லை பிளாஸ்டிக் கவர்களில் போட்டு எடுத்து சென்றனர். இதையடுத்து மற்றொரு நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் பேட்டி அளிக்கையில், ‘22 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யலாமா? என்பதற்காக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த நெல்லை ஆய்வு செய்ய எடுத்து செல்கிறோம். ஆய்வகத்தில் ஆய்வு செய்த பின்னர் அதன் அறிக்கையை அரசிடம் சமர்பிப்போம்’ என்றனர். நாகை மாவட்டத்தில் 149 கொள்முதல் நிலையம் உள்ளது. ஆனால் இரண்டு நிலையத்தில் மட்டும் ஆய்வு செய்தனர். இதனால், விவசாயிகள் கொந்தளிப்பில் உள்ளனர்.
மேலும் செய்திகள்
69% இடஒதுக்கீடு முறைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு: வழக்கு விசாரணை மார்ச் 5க்கு ஒத்திவைப்பு
காங்கிரஸை விமர்சிக்க மோடிக்கு தகுதியில்லை :புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆவேசம்
சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம்; படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி!!
புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி 2% குறைப்பு: துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவு
ஆல் பாஸ் அறிவிப்பு அரசு பள்ளி மாணவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடவில்லை-பொதுமக்கள், மாணவர்கள் பாதிப்பு
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!