குளித்தலை ரயில் நிலைய நுழைவாயிலில் ஆபத்தான நிலையில் நிற்கும் பழமையான மரம்
2020-10-23@ 13:01:16

குளித்தலை : கரூர் மாவட்டம் குளித்தலை ரயில் நிலையம் கரூர் அடுத்து இரண்டாம் நிலை ரயில் நிலையமாகும். இந்த ரயில் நிலையத்தில் தினந்தோறும் காலை முதல் மாலை வரை விரைவு ரயில்கள், பயணிகள் ரயில்கள் இரு மார்க்கத்திலும் வந்து செல்கின்றன. மேலும் சரக்கு ரயில்களும் செல்கிறது. இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் குளித்தலை ரயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
மேலும் கரூர் டெக்ஸ் நிறுவனத்திற்கு ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் சென்று வருவது வழக்கமாக இருந்து வருகிறது.தற்போது கொரோனா காலமென்பதால் கடந்த 8 மாத காலமாக பயணிகள் இன்றி ரயில் நிலையம் வெறிச்சோடி உள்ளது. இந்நிலையில் ரயில் நிலைய நுழைவு வாயிலில் பழமை வாய்ந்த மரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தின் அடிப்பகுதி பட்டுப்போய் கிளைகள் வலுவிழந்து காணப்படுவதால் எந்த நேரமும் விழும் அபாய நிலை உள்ளது. தற்போது மழை காலம் வருவதால் ஈரப்பதம் அதிகமாகி வலுவிழந்த மரம் விழும் அபாய நிலையில் உள்ளது.
இவ்வழியாக தினந்தோறும் ஏராளமானோர் நடந்தும், இருசக்கர வாகனத்திலும் கடந்து செல்கின்றனர். அப்போது மரம் சாய்ந்தால் கிளைகள் ஓடிந்தாலும் சாலையில் செல்லும் பாதசாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அச்சத்தை உருவாக்கி வருகிறது. அதனால் சம்பந்தப்பட்ட ரயில்வே நிர்வாகம் குளித்தலை ரயில் நிலைய நுழைவு வாயிலில் உள்ள பழமைவாய்ந்த பட்டுப்போன மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
ஓட்டுக்கு பணம் வாங்கவில்லை என வாக்காளர்களிடம் சத்திய பிரமாணம் வாங்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது: உயர்நீதிமன்றம்
27 மணி நேரம்..195 நாடு!: பென்சில் முனையில் உலக நாடுகளின் பெயர், தலைநகரங்களை செதுக்கி கல்லூரி மாணவி சாதனை..!!
பவானியில் செல்லியாண்டி அம்மன் கோவில் திருவிழா: பக்தர்களே கருவறைக்கு சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் நிகழ்வு
தேர்தல் பறக்கும்படை அதிரடி!: கடலூரில் உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.51 லட்சம் பறிமுதல்..!!
மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்: மாவட்ட செயலாளர் க.சுந்தர் வழங்கினார்
பைக் விபத்தில் போலீஸ்காரர் பலி
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்