தேர்தல் பிரசார கூட்டத்தில் தேஜஸ்வி மீது செருப்பு வீச்சு : பீகாரில் பரபரப்பு
2020-10-21@ 15:08:10

அவுரங்காபாத்,:பீகாரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் தேஜஸ்வி யாதவ் மீது, கூட்டத்தில் இருந்தவர்கள் செருப்பு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. பீகார் சட்டப்பேரவை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜக ஒரு அணியாகவும் ராஷ்டீரிய ஜனதா தளம் தலைமையில் மெகா கூட்டணியையும், சிராக் தலைமையிலான அணியும் மோதுகின்றன. முன்னாள் முதல்வர் லாலு மகன் தேஜஸ்வி யதவ் மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக உள்ளார். நேற்று அவுரங்காபாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.
அப்போது மேடையில் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அமர்ந்து இருந்தனர். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒரு நபர், தேஜஸ்வி யாதவை நோக்கி செருப்புகளை வீசினார். அவரின் இடதுபக்க தோள் அருகே பறந்த செருப்பு, அதிர்ஷ்டவசமாக அவர் மீது படவில்லை. 2வது செருப்பு அவரது மடியில் வந்து விழுந்தது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, உடனடியாக செருப்புகளை வீசிய நபர் அடையாளம் காணப்பட்டார். அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு போலீசில் ஒப்படைத்தனர்.
மேலும் செய்திகள்
தெலங்கானாவில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10% இட ஒதுக்கீடு
விமான நிலைய தகர்ப்பு ஆயுதம் சோதனை வெற்றி
வெளிநாட்டுக்கு டாலர் கடத்திய குற்றச்சாட்டு: கேரளாவில் சபாநாயகர் மீதான பதவி நீக்க தீர்மானம் தோல்வி
பிரதமரின் திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் மேலும் 1.68 லட்சம் புதிய வீடுகள்: மத்திய அரசு அனுமதி
அரசியல் காரணத்துக்காக வதந்திகள் பரப்பக் கூடாது: சுகாதார அமைச்சர் வர்தன் வேண்டுகோள்
3 மாநில போலீசாரின் முயற்சி தோல்வி: டெல்லிக்கு வெளியே டிராக்டர் பேரணியா? விவசாயிகள் ஏற்க மறுப்பு
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!