ஊதியம் வழங்காததை கண்டித்து மாநகராட்சி அலுவலகத்தை களப்பணியாளர்கள் முற்றுகை
2020-10-21@ 04:05:47

துரைப்பாக்கம்: சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு மற்றும் பரிசோதனை பணிக்காக ஒப்பந்த அடிப்படையில் களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள், தினசரி வீடுவீடாக சென்று காய்ச்சல், சளி, இருமல் மற்றும் உடல் வெப்பநிலை ஆகியவற்றை பரிசோதனை செய்து வருகின்றனர். அதன்படி, 14வது மண்டலத்தில் 62 பெண் களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட களப்பணியாளர்கள் நேற்று பெருங்குடியில் உள்ள 184வது வார்டு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த மாநகராட்சி உயரதிகாரிகள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் ஊழியர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், ஒரு வாரத்திற்குள் ஊதியம் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். அதனையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மேலும் செய்திகள்
துபாயில் இருந்து தங்கம் கடத்திய 3 பேர் கைது: ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
அத்தையின் நகையை திருடியவர் நண்பருடன் கைது
வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை
பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற டிரைவர் கைது
அதிகரிக்கும் ஆன்லைன் மோசடிகள் மொபைல் போன் செயலி மூலம் ரூ.80 ஆயிரம் மோசடி
திருக்கழுக்குன்றம் அருகே எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு: 4 பேருக்கு வலை
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!