திருவில்லிபுத்தூர் அருகே 2500 ஆண்டு பழமையான குத்துக்கல் கண்டுபிடிப்பு
2020-10-20@ 21:27:49

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே 2500 ஆண்டு பழமையான குத்துக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் குன்னூர் பகுதியில் பழமையான குத்துக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நெடுங்கல் என்றும் அழைக்கப்படும் இக்குத்துக்கல் 20 அடி உயரம் கொண்டதாக உள்ளது. 2500 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் வாழ்ந்து மறைந்த ஒரு இனக்குழு தலைவனுக்காக எடுக்கப்பட்ட நினைவு சின்னமாகவோ அல்லது ஆநிரை கவர்தல் போரில் இறந்துபட்ட வீரனுக்கு எடுக்கப்பட்டதாகவோ இருக்கலாம்.
சுற்றுப்பகுதியில் உள்ள மக்கள் முனியாண்டி என்ற பெயரில் இந்த குத்துக்கல்லை வழிபட்டு வருகின்றனர். தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திருவண்ணாமலை, தர்மபுரி, தேனி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் குத்துக்கல் அதிகம் காணப்படும் நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் முதன்முதலாக குத்துக்கல் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது என ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
காரின் சாவியை பிடுங்கி, ராஜேஷ் தாஸூடன் பேசுமாறு பெண் எஸ்.பி.யை வற்புறுத்தியதாக செங்கல்பட்டு எஸ்.பி மீது புகார்
காவலர் உடற்தகுதி தேர்வு ஏப்ரல் 12ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
அரசாணை இதுவரை வெளியிடப்படாத நிலையில் அரசின் கடன் தள்ளுபடி அறிவிப்புகள் அமலுக்கு வருமா? மக்களிடையே குழப்பம்
தேர்தல் நேரத்தில் ரூ.15 லட்சம் வரை ரொக்கமாக எடுத்து செல்ல அனுமதி கோரிய மனு தள்ளுபடி
கம்பம் சுருளி அருவியில் குளிக்க திடீர் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
ஒரத்தநாட்டில் பெரியார் சிலைக்கு காவி சால்வை அணிவிப்பால் பதற்றம்: காவி சால்வையை போலீசார் உடனடியாக அகற்றி நடவடிக்கை
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்