குடகனாற்றில் தண்ணீர் திறக்க கோரி வீடுகளில் 2ம் நாளாக கருப்பு கொடி ஏற்றி போராட்டம்
2020-10-20@ 20:42:27

சின்னாளபட்டி: குடகனாற்றில் முறையாக தண்ணீர் திறந்து விட கோரி, அனுமந்தராயன்கோட்டை உட்பட 20 கிராமங்களில் விவசாயிகள் 2ம் நாளாக கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்திலிருந்து குடகனாற்றில் உபரி நீரை திறந்துவிடுவது வழக்கம். கடந்த 5 வருடங்களாக சரிவர மழை பெய்யாததால் அணையிலிருந்து குடகனாற்றுக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை. கடந்த 2015ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா 110 விதியின் கீழ் ராஜவாய்க்கால் கட்டுவதற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்.
அப்போதைய பொதுப்பணித்துறை அதிகாரிகள், கன்னிமார் அருகே குடகனாற்றுக்கு தண்ணீர் திறந்து விடும் பகுதியை கான்கிரீட் கலவையால் அடைத்தனர். இதனால் குடகனாற்றுக்கு தண்ணீர் வராமல் இருந்து வந்தது. இதற்கிடையே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் குடகனாறு பாசன விவசாயிகள் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற விவசாயிகளின் கோரிக்கையையேற்று, 15 தினங்களுக்கு முன்பு குடகனாற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதற்கு வேடசந்தூர் பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், பாலம்ராஜக்காப்பட்டியையடுத்து குடகனாற்றில் தண்ணீர் நிறுத்தப்பட்டது.
இதனால் பாசனத்துக்கு முழுமையாக தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த குடகனாறு பாசன விவசாயிகள், குடகனாற்றில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தியும், அதிமுக அரசு மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்தும், ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்துக்குட்பட்ட அனுமந்தராயன்கோட்டை, பொன்னிமாந்துரை உள்ளிட்ட 20 கிராமங்களில் வீடுகளில் நேற்று கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர். 2ம் நாளாக இன்றும் போராட்டம் தொடர்கிறது.
மேலும் செய்திகள்
69% இடஒதுக்கீடு முறைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு: வழக்கு விசாரணை மார்ச் 5க்கு ஒத்திவைப்பு
காங்கிரஸை விமர்சிக்க மோடிக்கு தகுதியில்லை :புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆவேசம்
சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம்; படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி!!
புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி 2% குறைப்பு: துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவு
ஆல் பாஸ் அறிவிப்பு அரசு பள்ளி மாணவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடவில்லை-பொதுமக்கள், மாணவர்கள் பாதிப்பு
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!