ஜார்கண்ட் மாநிலத்தில் மாடு திருடிய 5 போலீஸ்காரர் கைது
2020-10-20@ 17:00:51

ஜார்கண்ட்: ராஞ்சி -ஜார்கண்ட் மாநிலம் ராம்கரில், சட்டவிரோதமாக மாடு கடத்தப்படுவதைத் தடுக்க வேண்டிய போலீசார், அவற்றை திருடிச் சென்றனர். இதையடுத்து, 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக ஜார்கண்ட் போலீசார் 32 மாடுகளை கடத்திச் ெசன்ற லாரியை கைப்பற்றியது. இவற்றை, பசு காப்பகத்தில் கொண்டு செல்வதற்கான பொறுப்பை சில போலீசாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அவர்கள், ராம்கரில் இருந்து கிழக்கு சிங்பூமில் உள்ள காட்ஷிலாவுக்கு அழைத்துச் சென்றனர். இதற்கிடையில், இந்த போலீசார் தாங்கள் சென்ற லாரியை நிறுத்தி, அங்கிருந்து மற்றொரு தனியார் வாகனத்தில் ஐந்து மாடுகளை ஏற்றினர்.
இந்த தகவல் மூத்த போலீஸ் அதிகாரிகளுக்கு சென்றது. அதையடுத்து, அங்கு வந்த அதிகாரிகள் 5 போலீசாரையும் கையும் களவுமாக பிடித்தனர். தொடர் விசாரணைக்கு பின்னர், 5 போலீஸ்காரர்களையும் சஸ்பெண்ட் செய்தனர். இதுகுறித்து, வடக்கு சோட்டானக்பூர் டிஐஜி ஏ.வி.ஹோம்கர் கூறுகையில், ‘ராஜரப்பா காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த 5 போலீசார் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.
மேலும் செய்திகள்
மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியீடு
45 வயதுக்கு மேல் உள்ள நபர்களுக்கு தடுப்பூசி போட மருத்துவ சான்றிதழ் கண்டிப்பாக வழங்க வேண்டும்: மத்திய அரசு
ஜனநாயக திருவிழா ஆரம்பம்... தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் அட்டவணை இன்று மாலை வெளியீடு: மக்கள் ஆர்வம்!!
மிரட்டல் கடிதத்துடன் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் பறிமுதல் : முகேஷ் அம்பானியின் உயிருக்கு ஆபத்தா என விசாரிக்க மராட்டிய அரசு உத்தரவு!!
மனைவி மட்டுமே அன்றாட வீட்டு வேலைகளை செய்ய வேண்டும் என கணவன் நிர்பந்திக்கக் கூடாது.. அவளும் ஒரு உயிர் தான் : உயர்நீதிமன்றம் அதிரடி!!
உருமாறும் கொரோனா வைரஸ்.. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் குறைவு, உயிரிழந்தோர் விகிதம் குறைவு, சிகிச்சை பெறுவோர் விகிதம் உயர்வு
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!