சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் 5 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் திருப்பணி: வேகப்படுத்த வலியுறுத்தல்
2020-10-20@ 14:53:34

சேலம்: சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில், 5 ஆண்டுகளுக்கு மேலாக மந்த கதியில் திருப்பணிகள் நடந்து வருகிறது. பணிகளை வேகப்படுத்தி விரைவில் கும்பாபிஷேக விழா நடத்த வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். சேலம் பழைய பஸ் ஸ்டாண்டையொட்டி, சுமார் 500 ஆண்டுகள் பழமையான கோட்டை மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு 22 நாட்கள் ஆடிப்பெருவிழா எடுக்கப்படும். இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்வது வழக்கம். இந்த கோயில் கட்டிடம் கடந்த சில ஆண்டாக பழுதாகி காணப்பட்டது. பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு, புதியதாக திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேக விழா நடத்த வேண்டும் என்று பக்தர்கள் அரசை வலியுறுத்தினர்.
இதனை தொடர்ந்து, கடந்த 2015ம் ஆண்டு பாலாலயம் செய்து, திருப்பணிகள் தொடங்கப்பட்டது. இதற்காக ஏற்கனவே இருந்த பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. இந்நிலையில், மூலவர் அம்மன் சன்னதியை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, பக்தர்கள் சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதன் காரணமாக திருப்பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் அம்மன் சன்னதி அகற்றப்பட்டது. மீண்டும் கடந்தாண்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டது. இதற்காக ராசிபுரத்தில் இருந்து கற்கள் கொண்டு வரப்பட்டு, சிற்பங்கள் செதுக்கப்பட்டு வருகிறது. ஆனால், 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் 50 சதவீத பணிகளே மட்டும் முடிந்துள்ளதாக பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சேலத்தை சேர்ந்த பக்தர்கள் கூறியதாவது: சேலத்தில் எட்டுபேட்டையை கட்டியாள்பவள் கோட்டை மாரியம்மன். அலுவலகம் செல்பவர்கள், வியாபாரிகள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கோட்டை மாரியம்மனை தரிசித்து விட்டு தான் செல்வார்கள். சிறப்பு வாய்ந்த இந்த கோயில் கட்டிடம் பழுதானதால், 5 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணிகள் தொடங்கப்பட்டது. தற்போது அம்மன் சன்னதிக்கு எதிரே சிறிய சன்னதி கட்டப்பட்டு, தினசரி பூஜைகள் நடந்து வருகிறது. பக்தர்கள் மூலவர் அம்மனை தரிசனம் செய்து ஐந்து ஆண்டுகளாகிறது. எனவே, திருப்பணியை வேகப்படுத்தி, அடுத்த 2021ம் ஆண்டு ஆடித்திருவிழாவுக்குள் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். இவ்வாறு பக்தர்கள் கூறினர்.
Tags:
சேலம் கோட்டை மாரியம்மன்மேலும் செய்திகள்
ஓட்டுக்கு பணம் வாங்கவில்லை என வாக்காளர்களிடம் சத்திய பிரமாணம் வாங்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது: உயர்நீதிமன்றம்
27 மணி நேரம்..195 நாடு!: பென்சில் முனையில் உலக நாடுகளின் பெயர், தலைநகரங்களை செதுக்கி கல்லூரி மாணவி சாதனை..!!
பவானியில் செல்லியாண்டி அம்மன் கோவில் திருவிழா: பக்தர்களே கருவறைக்கு சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் நிகழ்வு
தேர்தல் பறக்கும்படை அதிரடி!: கடலூரில் உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.51 லட்சம் பறிமுதல்..!!
மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்: மாவட்ட செயலாளர் க.சுந்தர் வழங்கினார்
பைக் விபத்தில் போலீஸ்காரர் பலி
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்