நண்பர்கள் பாக்கெட்டை நிரப்புவதில் மோடி பிஸி: ராகுல் குற்றச்சாட்டு
2020-10-18@ 01:17:13

புதுடெல்லி: ‘மோடி தனது நண்பர்களின் பாக்கெட்டை நிரப்புவதில் பிஸியாக இருப்பதுதான் நாடு பட்டினியில் தவிப்பதற்குக் காரணம்,’ என்று ராகுல் விமர்சனம் செய்துள்ளார். ‘உலக பட்டின குறியீடு’ என்கிற அமைப்பு, உலகளவில் பட்டினியால் தவித்து வரும் மக்களை கொண்ட நாடுகளின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடுகிறது. அதன் நடப்பு ஆண்டுக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ள 107 நாடுகளில் இந்தியா 94ம் இடத்தில் உள்ளது. இது பற்றி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘பட்டினியால் தவிக்கும் மக்களைக் கொண்ட நாடாக இந்தியா 94ம் இடத்தில் உள்ளது. இதற்கு மத்திய அரசே காரணம்.
தனது நண்பர்களின் பாக்கெட்டுகளை நிரப்புவதில் மோடி பிஸியாக இருக்கிறார். அதனால்தான், பட்டினியால் தவிக்கும் ஏழைகள் கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளது,’ என கூறியுள்ளார். இத்துடன் நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் போன்ற நாடுகளை விட இந்தியா பின் தங்கியிருப்பது பற்றிய வரைபட விளக்கத்தையும் ராகுல் வெளியிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் ராணுவத்துக்கு தெரியாமல் புதிய ஆப்களை பயன்படுத்தும் பாக். தீவிரவாத அமைப்புகள்: குறைந்த இன்டர்நெட்டிலும் வேகமாக செயல்படும்
முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி மீதான பாலியல் பலாத்கார வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க முடிவு: கேரள அரசு அதிரடி
ரூ.48,000 ஆயிரம் கோடியில் ராணுவத்துக்கு தேஜஸ் போர் விமானங்கள் விற்க ஒப்பந்தம்
விக்டோரியா மருத்துவமனையில் ஸ்டிக் உதவியுடன் நடக்கிறார் சசிகலா: மருத்துவர்கள் தகவல்
தடுப்பூசி பற்றி பரப்பப்படும் வதந்திகளை முறியடியுங்கள்: என்சிசி.க்கு மோடி வேண்டுகோள்
சாதனை பெண்களுக்கு வணக்கம் செலுத்துவோம்: பிரதமர் மோடி வாழ்த்து
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்