இந்தியாவில் கொரோனா பாதிப்பு: 75 லட்சமாக உயர்வு
2020-10-18@ 01:15:47

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை நேற்றிரவு 75 லட்சத்தை நெருங்கியது. மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாடு முழுவதும் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 62,212 பேர் பாதித்துள்ளனர்.இதன் மூலம், மொத்த பாதிப்பு 74,32,681 ஆக அதிகரித்துள்ளது. நோய் பாதித்த 837 பேர் புதிதாக இறந்ததை அடுத்து, மொத்த பலி 1,12,998 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை, 7,95,087 ஆக குறைந்துள்ளது. ஒன்றரை மாதங்களுக்கு பின் முதல் முறையாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 8 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. 65,24,596 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கையின்படி, கடந்த வெள்ளியன்று வரை 9,32,54,017 பேரின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. 16ம் தேதி மட்டும் 9,99,090 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றிரவு 75 லட்சத்தை நெருங்கியது.
மேலும் செய்திகள்
FasTag முறையால் ஆண்டுக்கு ரூ.20,000 கோடி அளவுக்கு எரிபொருள் செலவு மிச்சமாகும்!: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்..!!
சென்னை தி.நகரில் இல்லத்தில் சசிகலாவுடன் டிடிவி தினகரன் ஆலோசனை
புதுச்சேரியில் நாளை முதல் பள்ளிகள் வழக்கம் போல முழு நேரமும் இயங்கும்!: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!
வீரியம் குறையாத கொரோனா!: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,286 பேர் பாதிப்பு..மேலும் 91 பேர் உயிரிழப்பு..!!
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க மத்திய நிதி அமைச்சகம் பரிசீலனை
முடிவுக்கு வருமா விவசாயிகள் போராட்டம்..? டெல்லி எல்லையில் 100-வது நாளை நெருங்கும் விவசாயிகள் போராட்டம்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்