கல்லிடைக்குறிச்சியில் வனத்துறை அலட்சியத்தால் கர்ப்பிணி யானை சாவு
2020-10-15@ 11:40:23

வி.கே.புரம்: கல்லிடைக்குறிச்சி அருகே வனப்பகுதியில் சுற்றித்திரிந்த நோயுற்ற கர்ப்பிணி யானை வனத்துறையின் அலட்சியத்தால் நேற்று தனியார் தோட்டத்தில் இறந்து கிடந்தது. நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் கடந்த சில நாட்களாக நோயுற்ற யானை ஒன்று சுற்றி வந்தது. நேற்று முன்தினம் கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல் மலையடிவாரத்தில் உள்ள 80 அடி கால்வாய் பகுதியில் அந்த யானை நடமாட்டம் காணப்பட்டது. உடல் மெலிந்த நிலையில் நடக்க முடியாமல் சோர்ந்து அடிக்கடி ஆங்காங்கே படுத்து இளைப்பாறியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் வனத்துறையினர் யானையை மீட்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் நேற்று காலை மலைப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் அந்த யானை இறந்து கிடந்தது. தகவலறிந்து வனத்துறையினர் விரைந்து சென்று யானையின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு மணிமுத்தாறு வனப்பகுதியில் யானை உடல் அடக்கம் செய்யப்பட்டது.
கடந்த சில நாட்களாக கல்லிடைக்குறிச்சி வனப்பகுதியில் சுற்றித்திரிந்த இந்த நோயுற்ற யானையை காப்பாற்ற வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. யானையை மீட்டு சிகிச்சை அளித்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம் என்பது அப்பகுதி மக்கள் கருத்தாக உள்ளது. வனத்துறையினரின் அலட்சியத்தால் யானை இறந்தது அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அம்பை வனச்சரகர் (பொறுப்பு) சரவணகுமார் கூறுகையில், ‘இப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக சுற்றித்திரிந்த இந்த யானை செரிமானம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தது. அதற்கு தேவையான மருந்துகளை யானை நடமாடும் வழியில் வைத்தோம்.
ஆனால் யானை அதை சாப்பிடவில்லை. தற்போது பிரேத பரிசோதனையில் கர்ப்பிணியாக இருந்த இந்த யானையின் பற்களில் நோய் ஏற்பட்டிருந்ததால் உணவு, தண்ணீர் அருந்த முடியாமல் இறந்துள்ளது தெரியவந்துள்ளது. 15 வயதான இந்த யானை 220 செ.மீ. உயரம் உள்ளது. மணிமுத்தாறு வனப்பகுதியில் யானை அடக்கம் செய்யப்பட்டது’ என்றார்.
மேலும் செய்திகள்
69% இடஒதுக்கீடு முறைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு: வழக்கு விசாரணை மார்ச் 5க்கு ஒத்திவைப்பு
காங்கிரஸை விமர்சிக்க மோடிக்கு தகுதியில்லை :புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆவேசம்
சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம்; படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி!!
புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி 2% குறைப்பு: துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவு
ஆல் பாஸ் அறிவிப்பு அரசு பள்ளி மாணவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடவில்லை-பொதுமக்கள், மாணவர்கள் பாதிப்பு
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!