பெரியஇலை கிராமத்தில் நிழற்குடை அமைக்க கோரிக்கை
2020-10-14@ 19:13:21

சாயல்குடி: முதுகுளத்தூர் அருகே பெரியஇலை கிராமத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே பெரியஇலை கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள பொதுமக்கள் அத்திவாசிய பொருட்கள் வாங்க, அலுவலகம் சார்ந்த உதவிகளை பெறவும், மாணவர்கள் மேல்நிலை கல்வி படிக்கவும் முதுகுளத்தூர் சென்று வருகின்றனர். முதுகுளத்துூர்-தேரிருவேலி சாலையிலிருந்து 3 கிமீ தொலைவில் கிராமம் இருப்பதால் கிராமமக்கள் நடந்து வந்து சாலை மார்க்கத்தில் நின்று பஸ் ஏறி செல்லும் நிலை உள்ளது.
ஆனால் இங்கு பயணிகள் நிழற்குடை இல்லாததால், நிழற்குடை கட்டி தரும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதனையடுத்து பஸ்ஸ்டாப்பில் கிராமமக்கள் தென்னைமர கிடுகுகள் மூலம் தற்காலிக நிழற்குடை அமைத்துள்ளனர். இது குறித்து பெரியஇலை கிராமமக்கள் கூறுகையில், தேரிருவேலி-முதுகுளத்தூர் சாலை மார்க்கத்தில் அடிக்கடி பஸ் வசதி கிடையாது. இதனால் காலம் தாழ்ந்து வரும் பஸ்சுக்காக கிராமமக்கள் வெயிலிலும், மழையிலும் காத்திருக்கும் அவலம் பல ஆண்டுகளாக தொடர்கிறது. நிழற்குடை கட்டி தர பலமுறை மக்கள் பிரதிநிதிகள்,
அரசு அலுவலர்கள் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது காலையிலேயே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மேலும் பருவ மழை துவங்கி விட்டதால் திடீர், திடீரென மழை பெய்கிறது. இதனால் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியோர் நலன் கருதி தற்காலிக நிழற்குடை அமைத்துள்ளோம். இதுவும் தற்போது அடிக்கும் காற்றிற்கு 2 முறை சேதமடைந்து விட்டது. எனவே இங்கு நிரந்தரமான நிழற்குடை கட்டி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
மேலும் செய்திகள்
ஓட்டுக்கு பணம் வாங்கவில்லை என வாக்காளர்களிடம் சத்திய பிரமாணம் வாங்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது: உயர்நீதிமன்றம்
27 மணி நேரம்..195 நாடு!: பென்சில் முனையில் உலக நாடுகளின் பெயர், தலைநகரங்களை செதுக்கி கல்லூரி மாணவி சாதனை..!!
பவானியில் செல்லியாண்டி அம்மன் கோவில் திருவிழா: பக்தர்களே கருவறைக்கு சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் நிகழ்வு
தேர்தல் பறக்கும்படை அதிரடி!: கடலூரில் உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.51 லட்சம் பறிமுதல்..!!
மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்: மாவட்ட செயலாளர் க.சுந்தர் வழங்கினார்
பைக் விபத்தில் போலீஸ்காரர் பலி
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்