பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வை முறையாக எழுதாத மாணவர்களுக்கு ஆப்சென்ட் போடப்படும்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
2020-10-12@ 14:38:33

சென்னை: பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வை முறையாக எழுதாமல் படுத்துக்கொண்டும், டீக்கடையில் அமர்ந்து கொண்டும் தேர்வு எழுதியவர்களுக்கு ஆப்சென்ட் போடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் இந்த வார இறுதியில் செமஸ்டர் தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரேனா தொற்று காரணமாக அண்ணா பல்கலை கழக இறுதி ஆண்டு தேர்வு ஆன்லைன் மூலம் நடைபெற்றது. எனவே இறுதி ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகள் ஆன்லைன் வாயிலாக தேர்வை எழுதினர்.
எனவே தேர்வு சமயத்தில் மாணவர்கள் அண்ணா பல்கலை கழகம் அறிவித்த முறையடி எழுதாமல் படுத்துக் கொண்டும், டீக்கடையில் நின்றவாறும் எழுதியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இறுதி செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் மொபைல் எண், இ-மெயில் முகவரி உள்ளிட்டவற்றை பதிவு செய்ய வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் மாணவர்கள் ஆன்லைன் வழியில் தேர்வுகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 55 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு!!
தா. பாண்டியனின் வாழ்க்கையும், அனுபவங்களும் இளம் தலைமுறையினருக்கு ஒரு பாடமாக அமையும் : முதல்வர் பழனிசாமி புகழஞ்சலி!!
அரசியல் களத்தில் மனதில் பட்டதை துணிச்சலாக பேசியும்,செயல்பட்டும் வந்தவர் தா.பாண்டியன்: ஓபிஎஸ், கமல், தினகரன் உள்ளிட்டோர் புகழாரம்!!
ஆஸ்கர் பந்தயத்தில் முன்னேறும் சூரரைப் போற்று... சிறந்த படம், நடிகர், நடிகை ஆகிய 3 பிரிவுகளில் பரிந்துரை: படக்குழுவினர் மகிழ்ச்சி!!
புடம் போட்ட தங்கம் போல் வாழ்ந்த பொதுவுடைமைப் போராளி இன்று நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்: தா.பாண்டியன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்
CM Helpline '1100' வாயிலாக 24 மணிநேரமும் மக்கள் தங்கள் குறைகளை பதிவு செய்யலாம் : ஆர்.பி.உதயக்குமார் தகவல்!!
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!