தமிழக முதல்வர் வருகையால் பொலிவு பெறும் ஊட்டி நகரம்
2020-10-11@ 14:40:19

ஊட்டி: தமிழக முதலமைச்சர் நீலகிரிக்கு வருவதாக கூறப்படும் நிலையில், ஊட்டி நகரில் உள்ள அனைத்து நடைபாதைகளில் உள்ள அலங்கார தடுப்புகளுக்கு வர்ணம் பூசும் பணி ஜோராக நடக்கிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா ஆய்வு பணிக்காக விரைவில் நீலகிரி மாவட்டத்திற்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால், ஊட்டி நகரை அழகுப்படுத்தும் பணியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளன. தற்போது சேரிங்கிராஸ் முதல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரையும் நடைபாைத ஓரங்களில் அலங்கார தடுப்புகள் அமைக்கும் பணிகள், தடுப்புச்சுவர்களில் ஓவியங்கள் வரையும் பணிகள்,
அலங்கார தடுப்புகளுக்கு வர்ணம் பூசும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பூங்காவிற்கு செல்ல வாய்ப்புள்ளதால், தாவரவியல் பூங்கா செல்லும் சாலையோரங்களில் உள்ள அலங்கார தடுப்புக்களில் தற்போது வர்ணம் பூசும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. எனினும், முதல்வர் எப்போது வருகிறார் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
மேலும் செய்திகள்
சமூக வலைத்தளங்களில் தணிக்கை செய்யப்பட்ட வீடியோவை வெளியிட உத்தரவிடக் கோரி வழக்கு: பேஸ்புக், யூடியூப், கூகுள் நிறுவனம் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
சசிகலா அரசியலுக்கு வரவேண்டும்.. ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு எனது ஆதரவு உண்டு : பிரேமலதா விஜயகாந்த் கருத்து
சீர்காழியில் தீரன் பட பாணி கொலை, கொள்ளை.. கொள்ளையர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்த மக்கள்.. என்கவுண்டரில் ஒருவன் சுட்டுக் கொலை
சீர்காழி நகை கொள்ளை சம்பவம்..! தப்ப முயன்ற 3 கொள்ளையர்களில் ஒருவரை என்கவுண்டர் செய்தது காவல்துறை
நகை வியாபாரி வீட்டில் 2 பேரை கொலை செய்து 16 கிலோ தங்க நகைகள் கொள்ளை: சீர்காழியில் பரபரப்பு
துரோகிகளுக்கு மன்னிப்பு இல்லை முதல்வர் நாராயணசாமி ஆவேசம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!