வரும் சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும் : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி
2020-10-10@ 14:47:55

சென்னை,:வரும் சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கு மரண அடியாக இருக்கும் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:மதிமுக சரியான பாதையில் திட்டமிட்டு, இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கிலும், திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தலின்போது நாங்கள் கூறியது ேபால், தமிழகத்தை சனாதன சக்திகள் ஆக்கிரமிக்க திட்டமிட்டுள்ளன. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஊட்டிவளர்த்த சமூகநீதியை தகர்க்க முயற்சிக்கின்றன. இதை தடுக்க வேண்டியது மதிமுகவின் கடமை. வருகிற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். திமுக தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும் என்பதில் ஐயப்பாடு இல்லை. திமுக தலைவர் ஸ்டாலின் தான் முதல்வராக வருவார் என்பதற்கு எந்தவித மாறுபட்ட கருத்து இல்லை. இதை திடீரென்று இன்றைக்கு நான் சொல்லவில்லை. கட்சியில் எடுத்த முடிவை செயல்படுத்தும் நாளில் இருந்து சொல்லி வருகிறோம். எங்களது கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு இல்லை.
தமிழகம் ஊழல் மயமாகி வருகிறது. தமிழகத்தில் உரிமை காவு கொடுக்கப்பட்டு விட்டன. வேளாண் சட்டங்களை கொண்டு வந்து ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து, 3 மசோதாக்களையும் சட்டங்களாக்கி விவசாயிகளின் தலையில் பாறாங்கல்லை போட்டு விட்ட மத்திய அரசை எதிர்த்து களம் காண்கிறோம். மக்கள் மன்றத்திலும் போராடுகிறோம். நீதிமன்றத்திலும் போராடுகிறோம். திமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. 10 மாநில முதல்வர்கள் இச்சட்டத்தை எதிர்த்து குரல் கொடுக்க திமுக ஊக்குவித்து வருகிறது. திமுக தலைவர் கடிதம் எழுதியுள்ளார். ஒன்றுபட்ட சிந்தனையோடு தொடர்ந்து செயல்படுகிறோம். வருகிற தேர்தல் அதிமுகவுக்கு மரண அடியாக இருக்கும். அவர்களுக்குள் மனக்கசப்பு மறந்து விட்டோம் என்றும், கைகோர்த்து கொண்டோம் என்றும் அவர்களுக்குள் சொல்லிக்கொள்ளலாம். மக்கள் மன்றத்தில் அவர்களுக்கு இடமில்லை. மதிமுக தனித்தன்மையுடன் தான் போட்டியிடும். தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும். நான் பதவிகளுக்காக வாழவில்லை. லட்சியங்களுக்காக வாழ்கிறேன். வேறுவிதமான அரசியலை முன்னெடுக்கவுள்ளதாக வெளியான தகவல்கள் கற்பனையானவை, அதில், துளியளவும் உண்மை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
பொதுமக்களுக்கு அனுமதியில்லை: ஜெயலலிதா வாழந்த வேதா இல்லத்தை நாளை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி.!!!
தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 512 பேர் பாதிப்பு: 564 பேர் குணம்; 8 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை..!
இலங்கை போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில் உடனே தலையிட வேண்டும்: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.!!!
ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்புக்கு அதிமுகவினர் படையெடுப்பு: சென்னை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல்: ஆம்புலன்ஸ் செல்ல முடியாததால் நோயாளிகள் பாதிப்பு
இந்தியாவிலேயே அதிக நாட்கள் பதவியில் இருந்த பெண் முதல்வர் ஜெயலலிதா..! நினைவிட திறப்பு விழாவில் முதல்வர் பழனிசாமி பேச்சு
டெல்லி முதலாளிகளுக்கு விசுவாசம் காட்ட விவசாயிகளை புரோக்கர்கள் என்ற போலி விவசாயிதானே முதல்வர் பழனிசாமி : மு.க.ஸ்டாலின் தாக்கு!!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!