எப்போது வேண்டுமானாலும் நகருக்குள் நுழையலாம்: கொடைக்கானலை மிரட்டும் கொம்பன்: பொதுமக்கள், வியாபாரிகள் பீதி
2020-10-01@ 15:14:44

கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே உள்ள குறிஞ்சிநகர் விவசாய தோட்டப்பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக ஒற்றை காட்டு யானை நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ளது குறிஞ்சிநகர் பகுதி. இங்கு வாழை, உருளை கிழங்கு, காரட் ஆகியவை பயிரிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த பகுதியில் பல வருடங்களுக்கு பிறகு திடீரென ஒற்றை கொம்பன் யானை நுழைந்து விவசாய நிலத்தை சேதப்படுத்தியுள்ளது. இந்த விவசாய நிலங்களில் உள்ள வாழை மரங்களை சாய்த்தும், தண்ணீர் தொட்டியை உடைத்தும் சேதப்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து அறிந்த கொடைக்கானல் வனத்துறையினர் ஒற்றைக் கொம்பன் யானை சேதப்படுத்திய விவசாய நில பகுதிகளை பார்வையிட்டனர். பல வருடங்களுக்கு பிறகு இப்பகுதியில் யானை வந்தது அப்பகுதி விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சேதமடைந்த பகுதியை ஆய்வு செய்து வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களை பாதுகாக்க மின் வேலி அமைத்தும், உரிய இழப்பீடும் வழங்க வேண்டும் என குறிஞ்சி நகர் விவசாயிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த குறிஞ்சிநகர் கொடைக்கானல் நகர் பகுதிக்கு மிக அருகில் உள்ள பகுதியாகும். எனவே கொடைக்கானல் நகர் பகுதியை நெருங்கி உள்ள ஒற்றை கொம்பன் யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று கொடைக்கானல் பொதுமக்களும் குறிஞ்சிநகர் கிராம விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். கொடைக்கானல் நகருக்குள் இந்த ஒற்றைக் கொம்பன் யானை எப்போது வேண்டுமானாலும் வரும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
மேலும் செய்திகள்
சமூக வலைத்தளங்களில் தணிக்கை செய்யப்பட்ட வீடியோவை வெளியிட உத்தரவிடக் கோரி வழக்கு: பேஸ்புக், யூடியூப், கூகுள் நிறுவனம் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
சசிகலா அரசியலுக்கு வரவேண்டும்.. ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு எனது ஆதரவு உண்டு : பிரேமலதா விஜயகாந்த் கருத்து
சீர்காழியில் தீரன் பட பாணி கொலை, கொள்ளை.. கொள்ளையர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்த மக்கள்.. என்கவுண்டரில் ஒருவன் சுட்டுக் கொலை
சீர்காழி நகை கொள்ளை சம்பவம்..! தப்ப முயன்ற 3 கொள்ளையர்களில் ஒருவரை என்கவுண்டர் செய்தது காவல்துறை
நகை வியாபாரி வீட்டில் 2 பேரை கொலை செய்து 16 கிலோ தங்க நகைகள் கொள்ளை: சீர்காழியில் பரபரப்பு
துரோகிகளுக்கு மன்னிப்பு இல்லை முதல்வர் நாராயணசாமி ஆவேசம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!