பூந்தமல்லி ஊராட்சிகளில் எம்எல்ஏ திடீர் ஆய்வு: காட்டுப்பாக்கத்தில் முறையாக அமைக்காத மழைநீர் கால்வாய்: ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்க உத்தரவு
2020-09-30@ 00:07:13

பூந்தமல்லி: பூந்தமல்லி தொகுதி (திமுக) எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, காட்டுப்பாக்கம் உள்பட 5 ஊராட்சிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். பூந்தமல்லி தொகுதியின் பல்வேறு ஊராட்சிகளில் சாலைவசதி, கழிவுநீர், மழைநீர் கால்வாய் வசதி உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் மற்றும் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து, திமுக எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, கிராமம் கிராமமாக நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.
அதன் ஒரு பகுதியாக, பூந்தமல்லி ஒன்றியத்தில் உள்ள காட்டுப்பாக்கம், கண்ணடபாளையம், பாணவேடு தோட்டம், கோலப்பன்சேரி, காவல் சேரி ஆகிய ஊராட்சிகளில் நடக்கும் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, ஒன்றிய குழு தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு செய்தனர்.
காட்டுப்பாக்கம் ஊராட்சியில் அரசு கட்டி கொடுத்து இடிந்து விழும் நிலையில் இருந்த 97 தொகுப்பு வீடுகளை ஆய்வு செய்தனர். இதில் 17 வீடுகள் புதிதாக கட்டப்படுகின்றன. மீதமுள்ள 80 வீடுகளை சீரமைத்து புதுவீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எம்எல்ஏ உத்தரவிட்டார். பிஜி அவென்யூவில் கட்டப்பட்டு இருந்த மழைநீர் கால்வாய், முறையாக கட்டப்படாமல் இருந்தது. அதில், ஒரு சொட்டு மழைநீர் செல்ல வழியில்லை. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்கள் கடும் சிரமம் அடைவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும், கடந்த 5 ஆண்டுகளாக அதிமுகவை சேர்ந்தவர் பூந்தமல்லி ஒன்றிய குழு தலைவராக இருந்தார்.
அவரது மகன், காட்டுப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். அவர்களது திட்டத்தின்படிதான் இந்த மழைநீர் கால்வாய் கட்டப்பட்டது. இந்த கால்வாயால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. மக்கள் வரிப்பணத்தை வீணாக்கியதோடு மட்டுமின்றி, முறையாக கட்டவில்லை. இதில் முறைகேடு நடந்துள்ளது என சரமாரியாக புகார் கூறினர். இதையடுத்து அந்த கால்வாயை கட்டிய ஒப்பந்ததாரருக்கு, உடனடியாக நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, அம்மன் நகர், செந்தூர்புரம் ரோடு, பிஜி அவென்யூ உள்பட பல பகுதிகளில் சாலைகள் மோசமாக உள்ளதாக அப்பகுதி மக்கள் அவரிடம் புகார் தெரிவித்தனர். அவற்றை சீரமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எம்எல்ஏ, பொதுமக்களிடம் உறுதியளித்தார்.
ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள காரிய மேடை கட்டி 5 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், அதனை இதுவரை பயன்படுத்தப்படாமல் ஊராட்சி மன்ற பழைய பொருட்களை போட்டு வைத்திருந்தனர். அதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது, ஒன்றிய குழு துணை தலைவர் பரமேஸ்வரி கந்தன், பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணி, தேவி உள்பட பலர் உடனிருந்தனர்.
மேலும் செய்திகள்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு: சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்.!!!!
நக்சல்களின் கண்ணிவெடி தாக்குதலில் வீரமரணம் எய்திய தமிழக ராணுவ வீரர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் : முதல்வர் பழனிசாமி
கடன் வாங்காத மாநிலமே இல்லை: பல்வேறு சோதனைகளைத் தாண்டி 4 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்துள்ளேன்...முதல்வர் பழனிசாமி பேட்டி.!!!
தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 55 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு!!
தா. பாண்டியனின் வாழ்க்கையும், அனுபவங்களும் இளம் தலைமுறையினருக்கு ஒரு பாடமாக அமையும் : முதல்வர் பழனிசாமி புகழஞ்சலி!!
அரசியல் களத்தில் மனதில் பட்டதை துணிச்சலாக பேசியும்,செயல்பட்டும் வந்தவர் தா.பாண்டியன்: ஓபிஎஸ், கமல், தினகரன் உள்ளிட்டோர் புகழாரம்!!
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!