மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி சென்னை உள்பட 3 நகரங்களில் என்ஐஏ கிளை
2020-09-29@ 00:34:58

புதுடெல்லி: சென்னை, ராஞ்சி, இம்பால் ஆகிய நகரங்களில் கிளைகளை அமைக்க தேசிய புலனாய்வு அமைப்புக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. தீவிரவாதம், தேசப்பாதுகாப்பு தொடர்புடைய வழக்குகளை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. இதன் தலைமையகம் டெல்லியில் உள்ளது. கிளைகள் கவுகாத்தி, மும்பை, ஜம்மு காஷ்மீர், கொல்கத்தா, ஐதராபாத், கொச்சி, லக்னோ, ராய்ப்பூர், சண்டீகர் ஆகிய இடங்களில் உள்ளன. இந்நிலையில், என்ஐஏ.வின் திறனை மேம்படுத்தும் வகையில் அதன் கிளைகளை சென்னை, ராஞ்சி, இம்பால் ஆகிய நகரங்களில் கூடுதலாக அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நடவடிக்கை என்ஐஏ திறனை மேம்படுத்தும் என்று உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பு, பெங்களூருவில் என்ஐஏ கிளையை அமைக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பாவும், பாஜவின் புதிய இளைஞர் அணி தலைவருமான தேஜஸ்வி சூர்யா, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். பெங்களூரு தீவிரவாதிகளின் மையமாக மாறி வருவதாக தேஜஸ்வி கூறியிருந்தார். அதோடு, தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் கடந்த சில ஆண்டுகளாகவே தீவிரவாதிகளுடன் தொடர்புடைய ஏராளமானோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் என்ஐஏ அலுவலக கிளை அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
* 2008ம் ஆண்டு மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, என்ஐஏ சட்டத்தின் கீழ் தேசிய புலனாய்வு அமைப்பு தொடங்கப்பட்டது.
* 2019ல் இந்த அமைப்பு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.
* கடந்த 2019ல் என்ஏஐ சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தின்படி, இந்தியாவிற்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகள் மட்டுமின்றி இந்தியர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்திய சொத்துக்கள் மீது நடத்தப்படும் தீவிரவாத தாக்குதல், சைபர் தீவிரவாதம், ஆயுதம் மற்றும் மனிதக் கடத்தல் வழக்குகளையும் என்ஐஏ விசாரிக்கும் வகையில் என்ஐஏ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
Tags:
Central Ministry of Home Affairs Permission Chennai 3 Cities NIA மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி சென்னை 3 நகரங்களில் என்ஐஏ கிளைமேலும் செய்திகள்
போராட்டத்தில் வன்முறையை தூண்டிவிட்டது யார்?.. டெல்லி வன்முறைக்கு உள்துறை அமைச்சரே பொறுப்பு: அமித்ஷா பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்
நெல்லூரில் ஆழ்கடலில் மீன்பிடித்த தமிழகத்தை சேர்ந்த 180 பேர் ஆந்திர மீனவர்களால் சிறைபிடிப்பு: தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமாறு குடும்பத்தினர் கோரிக்கை
மக்களை தியாகம் செய்ய வரவில்லை: வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் இருந்து 2 விவசாய சங்கங்கள் விலகல்.!!!
'எங்கள் மகள்கள் சொர்க்கம் செல்வதை தடுத்துவிட்டீர்களே'...நரபலி கொடுத்த கொடூர பெற்றோர் இறுதிச்சடங்கில் போலீசாரிடம் ஆவேசம் .
2021ம் ஆண்டில் கொப்பரைத் தேங்காய்க்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.375 உயர்த்தி தர மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி: கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதி
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!