தீவிபத்து ஏற்பட்ட ஐசிஎப் தொழிற்சாலையில் ஆர்பிஎப் வீரர் திடீர் தற்கொலை: விசாரணைக்கு பயந்து இறந்தாரா?; போலீசார் தீவிர விசாரணை
2020-09-28@ 02:45:22

சென்னை: சென்னை ஐசிஎப் அடுத்த நியூ ஆவடி சாலையில் ரயில்வே தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு இன்ஜின்கள், ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி நடக்கிறது. ரயில் பெட்டிகளுக்கு தேவையான எலக்ட்ரிக்கல் உதிரிபாகங்கள் எண் 54 என்ற சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. சுமார் 5000 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள இந்த குடோனில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள எலக்ட்ரிகல் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் இங்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சுமார் 6 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் கோடிகணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. தீயணைப்பு துறை டிஜிபி சைலேந்திரபாபு உள்பட அதிகாரிகள் பலர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து ஐசிஎப் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தீவிபத்து தொடர்பாக அய்யப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் காஜாமைதீனை (58) போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். விசாரணைக்கு பயந்த காஜாமைதீன் நேற்று காலை தீ விபத்து நடந்த இடத்தின் அருகே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அங்கு பணிக்கு வந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் ஒருவர் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, ஐசிஎப் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணைக்கு பயந்து காஜாமைதீன் தற்கொலை செய்தாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:
Fire ICF factory RPF soldier suicide police investigation தீவிபத்து ஐசிஎப் தொழிற்சாலை ஆர்பிஎப் வீரர் தற்கொலை போலீசார் விசாரணைமேலும் செய்திகள்
இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையிலான ஊரடங்கு போதுமானதல்ல : ராமதாஸ் வேண்டுகோள்
கோவில்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்?: வழிபாட்டு தலங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி மதத் தலைவர்களுடன் தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை..!!
அனைத்து கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள், தேர்வுகள் : தமிழக அரசு அதிரடி!!
இரவு நேர பொது ஊரடங்கு ரயில்களுக்கு பொருந்தாது; திட்டமிட்டப்படி ரயில்கள் இயங்கும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள அனைத்து மதத் தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும் வடமாநில தொழிலாளர்கள்
கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்
20-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்