பட்டிவீரன்பட்டியில் 500 ஆண்டுகள் பழமையான முத்தாலம்மன் கோயில் திருவிழா இந்த ஆண்டு நடக்குமா?...7 ஊர் மக்கள் எதிர்பார்ப்பு
2020-09-19@ 15:04:17

பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டியில் சுமார் 500 ஆண்டுகளாக நடக்கும் முத்தாலம்மன் கோயில் திருவிழா இந்த ஆண்டு நடைபெறுமா என 7 ஊர் மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. பட்டிவீரன்பட்டி, தேவரப்பன்பட்டி, சின்னகவுண்டன்பட்டி, சின்ன அய்யம்பாளையம், பெரிய அய்யம்பாளையம், சித்தரேவு, நெல்லூர் ஆகிய 7 ஊர்களில் முத்தாலம்மன் கோயில்கள் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் 3 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். சுமார் 500 ஆண்டுகளுக்கும் மேலாக தொன்று தொட்டு நடக்கும் இத்திருவிழாவிற்காக 15 நாட்களுக்கு முன்பு சாமி சாட்டுதல், காப்பு கட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். சாமி சாட்டுதல் நடந்த நாளிலிருந்து பொதுமக்கள் காப்பு கட்டி விரதம் துவங்குவர்.
கிடா வெட்டுதல், வழுக்கு மரம் ஏறுதல், உறி அடித்தல், மேளதாளம், வாணவேடிக்கை, கும்மி அடித்தல் கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் என இப்பகுதியே திருவிழாவின்போது களைகட்டும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இத்திருவிழா நிகழ்வுகளை கண்டு ரசிப்பர். இவ்வாறு பாரம்பரியாக நடந்து வரும் முத்தாலம்மன் கோயில் திருவிழா இந்தாண்டு அதற்கான முன்னேற்பாடு துவங்காததாலும், கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும் நடைபெறுமா என சந்தேகம் பக்தர்கள் மத்தியில் எழுந்துள்து. எனவே ஊரடங்கு கட்டுப்பாடுகளை களைந்து பாரம்பரியாக நடக்கும் இத்திருவிழா நடைபெற வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
ரயில் மோதி இருவர் பலி
பெரியபாளையம் காவல் நிலையத்தில் வீணாகும் பறிமுதல் வாகனங்கள்
திருவள்ளூர் பகுதிகளில் கோடைக்கு முன்பே அறிவிக்கப்படாத மின்தடை: பொதுமக்கள் விரக்தி
தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை உடைந்த விவகாரம் தலைமை பொறியாளர் உட்பட 4 பேர் சஸ்பெண்ட்: தமிழக அரசு நடவடிக்கை
திமுக ஆட்சிக்கு வரும்: முதல்வர் எடப்பாடி பிரசாரத்தால் அதிமுகவினர் அதிர்ச்சி
ரூ.1 லட்சம் குட்கா மினி லாரியுடன் பறிமுதல் டிரைவர் கைது
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்