காஞ்சிபுரம் நகரில் 2 இடங்களில் நவீன பயணிகள் நிழற்குடை: திமுக எம்எல்ஏ திறந்து வைத்தார்
2020-09-08@ 00:59:17

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நகரில் ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி தெரு மற்றும் விளக்கொளி பெருமாள் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் நவீன பஸ் பயணிகள் நிழற்குடைகளை காஞ்சி திமுக எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் பெரு நகராட்சி ஏகாம்பர நாதர் சன்னதி தெரு, விளக்கொளிப் பெருமாள் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ₹19 லட்சம் மதிப்பில் பஸ்களில் செல்லும் பயணிகளுக்கு, நிழற்கூடைகள் கட்டி முடிக்கப்பட்டன.கடந்த 5 மாதங்களுக்கு பின், ஊரடங்கு உத்தரவு தளர்வுகளை தொடர்ந்து அனைத்து பஸ்களும் இயக்கப்படுகின்றன.
இதையொட்டி, பொதுமக்கள் நிழற்கூடங்களை பயன்படுத்தும் வகையில், திமுக எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்தார். காஞ்சிபுரம் நகராட்சி பொறியாளர் ஆனந்த ஜோதி, நகர திமுக செயலாளர் சன்பிராண்ட ஆறுமுகம், மாவட்ட அவைத்தலைவர் சேகரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பி.சீனிவாசன், செங்குட்டுவன், நகர திமுக நிர்வாகிகள் சந்துரு, ஜெகன்நாதன், கருணாநிதி, அபுசாலி, யுவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
சிஎம்டிஏ திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டம் பிப்.1ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்: வேலூரில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்து ஆய்வு
முதுநிலை படிப்புகளில் சேர மார்ச் 25, 26ம் தேதி டான்செட் சி.இ.இ.டி.ஏ நுழைவுத்தேர்வு: அண்ணா பல்கலை அறிவிப்பு
2022ம் ஆண்டிற்கான தொழிலாளர் நிதி செலுத்த 31ம் தேதி கடைசி நாள்: தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம் தகவல்
அடுத்தாண்டு மார்ச் மாத இறுதிக்குள் குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தகவல்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!