அமைப்புசாரா தொழிலாளர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்று புதுப்பிக்க கால நீட்டிப்பு: அமைச்சர் நிலோபர் கபில் அறிவிப்பு
2020-09-06@ 00:26:46

சென்னை: தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
நல வாரியங்களில் பதிவு செய்த அமைப்புசாரா தொழிலாளர்கள் 60 வயது பூர்த்தி அடைந்தால் அவர்கள் மாத ஓய்வூதியம் பெற்றிட வாரியங்களின் நல திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.ஓய்வூதியம் பெறும் அமைப்புசாரா தொழிலாளர்கள், ஆயுள் சான்றினை ஒவ்வோர் ஆண்டும் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையரிடம் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஏப்ரல் மாதத்தில் அளிக்க வேண்டும். தற்போது கொரோனா காரணமாக அமைப்புசாரா நல வாரியங்களில் தங்களது பதிவினை புதுப்பித்தல் செய்வதும் ஆயுள் சான்றினை அளிக்கவும் இயலாத நிலை ஏற்பட்டது. எனவே 1.3.2020 முதல் 31.12.2020 வரை உள்ள பதிவு பெற்ற அமைப்புசாரா தொழிலாளர்களின் புதுப்பித்தல் தேதி 31.12.2020 வரை ஒரு தடவையாக தமிழக அரசால் தளர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் ஓய்வூதியம் பெரும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஆயுள் சான்று வழங்கும் தேதியும் 31.12.2020 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Tags:
அமைப்புசாரா தொழிலாளர்கள் ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்று புதுப்பிக்க கால நீட்டிப்ப அமைச்சர் நிலோபர் கபில்மேலும் செய்திகள்
காதலனை மாற்றிக்கொண்டே இருக்கும் வெளிநாட்டு பெண்ணை போன்றவர் நிதிஷ்: பாஜக தேசிய தலைவர் சர்ச்சை பேச்சு
பாஜகவை கடுமையாக விமர்சிக்கும் சுப்பிரமணியன் சுவாமி மம்தாவுடன் திடீர் சந்திப்பு
எனக்கு பொறுப்பு கொடுப்பதில்லை; நான் அமைதியாக இருக்க வேண்டுமாம்!: தெலங்கானா பாஜக மீது நடிகை அதிருப்தி
ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி விடியவிடிய ஆலோசனை: இரு தரப்பினர் திடீர் மோதலால் பரபரப்பு
இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை இழந்தார் எடப்பாடி: லெட்டர்பேடில் இருந்தும் நீக்கினார்
அனைத்து கசப்புகளையும் மனதில் வைக்க வேண்டாம் எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் திடீர் அழைப்பு: சென்னை வீட்டில் பரபரப்பு பேட்டி
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...