வனப்பகுதியில் மாடு தேடியவர்களை விரட்டிய சிறுத்தைகள் : ஆம்பூர் அருகே பரபரப்பு
2020-08-31@ 15:04:37

ஆம்பூர்: ஆம்பூர் அருகே வனப்பகுதியில் காணாமல் போன மாட்டை தேடி சென்றவர்களை அங்கிருந்த சிறுத்தைகள் விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான போட்டிகளில் கலந்து கொள்ளும் காளை கடந்த சில நாட்களுக்கு முன் தப்பி சென்றது. இதை ஆம்பூர் அருகே கடந்த ஒரு வாரமாக செல்வம் தரப்பினர் தேடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஆம்பூர் அடுத்த சுட்டகுண்டா அருகே காளை மாடு திரிவதை அறிந்த செல்வம் மற்றும் அவரது தரப்பினர் அங்கு சென்றனர். சுட்டகுண்டாவில் இருந்து ஆந்திர மாநிலம், பெத்தூர் செல்லும் பழைய மிலிட்டரி சாலையில் சிலா மரத்து பாறை என்னுமிடத்தில் சென்றனர்.
அப்போது, அங்கு 3 சிறுத்தைகள் வேட்டையாடிய விலங்கின் இறைச்சியை தின்று கொண்டிருப்பதை கண்டனர். இதைப்பார்த்த சிறுத்தைகள் கூட்டமாக வந்தவர்களை கண்டதும் உறுமியபடி துரத்தியுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உயிர் பயத்தில் தப்பித்தோம், பிழைத்தோம் என அங்கிருந்து தப்பி வந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகள்
வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் சப்ளையில் ஏற்பட்ட சிக்கலால்தான் 7 நோயாளி இறப்பு: திடுக்கிடும் தகவல்கள்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த 23ல் அமல்..! புதுச்சேரியில் சனி, ஞாயிறு முழு ஊரடங்கு
திருமணம் ஆகாமலேயே ஆசிரியை கர்ப்பம்: வீட்டில் பிரசவம் பார்த்ததில் தாய், குழந்தை உயிரிழப்பு: குழந்தை சடலம் கிணற்றில் வீச்சு
சீரான மும்முனை மின்சாரம் வழங்காததால் 70,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரின்றி கருகும் அவலம்: அரக்கோணம், நெமிலியில் விவசாயிகள் வேதனை
நாகை மாவட்டத்தில் பதிவான வாக்கு இயந்திரம் உள்ள கட்டிடம் மீது பறந்த ட்ரோன்: சென்னையை சேர்ந்த 3 பேர் சிக்கினர்
வாக்கு எண்ணிக்கை மையத்தில் 96 மர்ம காலி டிரங்க் பெட்டிகள்: தேனியில் பரபரப்பு
இன்றைய சிறப்பு படங்கள்
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!
ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!
எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!
கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்