நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் அனைத்து எம்பி.க்களுக்கும் கொரோனா பரிசோதனை: சபாநாயகர் பிர்லா அறிவிப்பு
2020-08-29@ 00:21:26

புதுடெல்லி: ‘நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்கும் முன்பாக அனைத்து எம்பி.க்களும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்,’ என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார். கொரோனா பாதிப்புக்கு மத்தியில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், அடுத்த மாதம் 14ம் தேதி முதல் அக்டோபர் 1ம் தேதி வரை நடத்தப்பட வாய்ப்புள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கவனித்து வருகிறார். இது தொடர்பாக, மத்திய சுகாதார அமைச்சகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்), எய்ம்ஸ், மத்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, டெல்லி அரசு அதிகாரிகளுடன் சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘‘கூட்டத் தொடரில் பங்கேற்கும் அனைத்து எம்பி.க்களும், 72 மணி நேரத்திற்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்ய கொள்ள வலியுறுத்தப்படுவார்கள். அதே போல், நாடாளுமன்றத்திற்கு வரக்கூடிய அதிகாரிகள், அமைச்சக பிரதிநிதிகள், ஊடக மற்றும் அவை செயலக அதிகாரிகள் அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அனைவரிடமும் தொடுதலற்ற பாதுகாப்பு பரிசோதனைகளும் செய்யப்படும்,’’ என்றார்.
'கேள்வி நேரத்தை குறைக்க கூடாது'
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி (காங்கிரஸ்) தலைவரான ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, மக்களவை சபாநாயகருக்கு 2 பக்க கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர், ‘கூட்டத்தொடரை சுமூகமாக நடத்தவும், அதே சமயம் எம்பிக்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு சபாநாயகர் எடுத்து வரும் நடவடிக்கைளை மனதார பாராட்டுகிறோம். ஆனால், கொரோனாவை காரணம் காட்டி, கேள்வி நேரத்தையும் பூஜ்ய நேரத்தையும் குறைக்க பரிந்துரை இருப்பதாக அறிகிறோம். இது, தேச நலன் குறித்த விஷயங்களை எம்பிக்களை அவையில் எழுப்புவதை தடுக்கும் முயற்சியாகும். தற்போதைய கொரோனா பாதிப்பு காலகட்டத்தில், கேள்வி நேரத்தையும், பூஜ்ய நேரத்தையும் குறைப்பது எம்.பி.க்களின் நலனுக்கானதாக இருக்காது,’ என கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
கவர்னர் தமிழிசை நேரடி கவனிப்பு: 31 ஆண்டுகளுக்கு பின் புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சி அமல்...ஜனாதிபதி ராம்நாத் ஒப்புதல்!!!!
அருணாச்சல பிரதேசம், சிக்கிம் எல்லையில் சீனா ஊடுருவ முயற்சி?.. கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதாக தகவல்
ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க ரயில் கட்டணம் திடீர் உயர்வு: இந்திய ரயில்வே அறிவிப்பு
மீனவர்களுக்கு தேவை தனி அமைச்சகமே தவிர, மற்றோரு அமைச்சகத்தின் கீழ் வரும் ஒரு துறை அல்ல... பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி பதில்
நாட்டில் உள்ள அனைத்தையும் விற்கும் மோடி அரசு: இந்த மத்திய அரசால் மக்களை கொடூரமாக சுரண்ட மட்டுமே முடியும்: மம்தா பானர்ஜி கடும் விமர்சனம்
தங்கம் போல் உயரும் பெட்ரோல், டீசல் விலை: மத்திய அரசை கண்டித்து எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தில் பயணித்த மே.வங்க முதல்வர் மம்தா.!!!!
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்