இந்தியாவில் ஏற்படும் கொரோனா உயிரிழப்பு: 42 % பேர் மகாராஷ்டிரா மக்கள்: தேவேந்திர பட்னாவிஸ் பேட்டி...!!
2020-08-11@ 17:12:59

மும்பை: இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ், முன்பை விட பலமடங்கு அதிகரித்து காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக மகாராஷ்டிரா மாநிலம் திகழ்கிறது. அம்மாநிலத்தில் வேகமாக பரவி வரும் தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் மராட்டிய மாநில எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று கோவாவிற்கு சென்றிருந்தார். அங்கு அந்த மாநில பா.ஜனதா முதல்வரான பிரமோத் சாவந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இதன் பின்னர் தேவேந்திர பட்னாவிசிடம் மராட்டிய கொரோனா நிலவரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதை அடுத்து அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது: மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு நிலைமை மிக மோசமாக உள்ளது.
நாடு முழுவதும் ஏற்படும் மொத்த உயிரிழப்பில் மராட்டியத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 42 சதவீதம் பேர் பலியாவ தாக தகவல் தெரிவித்தார். மேலும் கொரோனா உயிரிழப்பு அதிகரிப்பதை மராட்டிய அரசு தடுக்க தவறி விட்டது. மேலும் பரிசோதனைகளை அதிகரித்து, தனிமை மையங்களை அதிகரிக்க வேண்டும். இதனையடுத்து, ஆன்டிஜென் பரிசோதனை முறையை கைவிட்டு ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
மேலும் செய்திகள்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி எங்கே?.. ஒன்றிய பட்ஜெட்டில் நிதி ஒதுக்காததை கண்டித்து டெல்லியில் தமிழக எம்.பி.க்கள் போராட்டம்..!
அதானி குழுமத்தை சேர்ந்த 9 நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சி: உலக பணக்காரர்கள் பட்டியலில் 15-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்
சாமானிய மக்களுக்கு பலன் தரும் பட்ஜெட்; வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்..!
ஜெகன் அண்ணா காலனியில் வீடுகள் கட்டும் பணியை மார்ச் இறுதிக்குள் முடிக்க வேண்டும்-சித்தூர் ஆணையாளர் உத்தரவு
திருப்பதி பைரெட்டிபள்ளி பகுதியில் ₹3.25 கோடியில் புதிய சிமெண்ட் சாலைகள், கால்வாய்கள்-எம்பி தகவல்
உணவு விஷயத்தில் அலட்சியம் காட்டக்கூடாது குழந்தைகளின் உடல்நலம், கல்வியில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்-ஆய்வு செய்த கலெக்டர் உத்தரவு
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!