இந்தியாவில் ஏற்படும் கொரோனா உயிரிழப்பு: 42 % பேர் மகாராஷ்டிரா மக்கள்: தேவேந்திர பட்னாவிஸ் பேட்டி...!!
2020-08-11@ 17:12:59

மும்பை: இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ், முன்பை விட பலமடங்கு அதிகரித்து காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக மகாராஷ்டிரா மாநிலம் திகழ்கிறது. அம்மாநிலத்தில் வேகமாக பரவி வரும் தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் மராட்டிய மாநில எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று கோவாவிற்கு சென்றிருந்தார். அங்கு அந்த மாநில பா.ஜனதா முதல்வரான பிரமோத் சாவந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இதன் பின்னர் தேவேந்திர பட்னாவிசிடம் மராட்டிய கொரோனா நிலவரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதை அடுத்து அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது: மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு நிலைமை மிக மோசமாக உள்ளது.
நாடு முழுவதும் ஏற்படும் மொத்த உயிரிழப்பில் மராட்டியத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 42 சதவீதம் பேர் பலியாவ தாக தகவல் தெரிவித்தார். மேலும் கொரோனா உயிரிழப்பு அதிகரிப்பதை மராட்டிய அரசு தடுக்க தவறி விட்டது. மேலும் பரிசோதனைகளை அதிகரித்து, தனிமை மையங்களை அதிகரிக்க வேண்டும். இதனையடுத்து, ஆன்டிஜென் பரிசோதனை முறையை கைவிட்டு ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
மேலும் செய்திகள்
புலம்பெயர் தொழிலாளர்களின் வங்கிகணக்குகளில் பணம் செலுத்துவது மத்திய அரசின் கடமை : ராகுல் காந்தி ட்வீட்
தாயிடம் இருந்து தவறி தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை உயிரை பணயம் வைத்து மீட்ட ரயில்வே ஊழியருக்கு அமைச்சர் பியூஷ் கோயல் பாராட்டு..!!
கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ராணுவம் உதவ வேண்டும்: மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள்
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த சிறிய ரக ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!
டெல்லியில் 144வது நாளாக போராட்டம் : வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை நிறுத்த முடியாது என விவசாயிகள் திட்டவட்டம்
1 கிலோ தக்காளி வேணுமா ? அப்ப கொரோனா தடுப்பூசி போடுங்க... மூக்குத்தி, சோப்பு, ஜூஸ்-ஐ தொடர்ந்து கவர்ச்சிகரமான அறிவிப்புகள்!!
கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்
20-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்