13, 14வது கொண்டை ஊசி வளைவு: ஏற்காடு பாதையில் மண் சரிவு: சாலைகள் தரமற்று அமைப்பதாக குற்றச்சாட்டு
2020-08-11@ 12:24:14

ஏற்காடு: ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், 13 மற்றும் 14வது கொண்டை ஊசி வளைவில் மண்சரிவு ஏற்பட்டது. மலைப்பாதையில் சாலை தரமின்றி அமைக்கப்படுவதால், அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஏற்காட்டில் கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், பூமி குளிர்ந்து மண் இறுக்கம் குறைந்து இளகியுள்ளது. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், ஏற்காடு மலைப்பாதையில் 13 மற்றும் 14வது கொண்டை ஊசி வளைவில் மண்சரிவு ஏற்பட்டு, சாலையின் நடுவே கற்கள் விழுந்தன.
இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறையினர், நேற்று காலை கற்களை அப்புறப்படுத்தினர். மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டதையடுத்து, தற்காலிகமாக சாலையை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், ஏற்காட்டில் புதிதாக மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகள் தரமாக இல்லாததால், சாலையில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. தற்போது, ஊரடங்கு காரணமாக வாகனங்கள் இயக்கப்படாததால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால், ஊரடங்கு முடிந்து வழக்கம் போல் வாகனங்கள் இயக்கப்படும் போது, பெரும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, ஏற்காட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து, தரமற்ற சாலைகள் அமைத்த ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலத்தில் கேரளா மற்றும் நீலகிரி மலைப்பகுதிகளில் நிலச்சரிவால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, மண்அரிப்பு ஏற்படாத வகையில், சாலைகளை தரமாக அமைக்க வேண்டும் என நீலமலைத் தோட்டத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் நல்லமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் செய்திகள்
திருட்டு வழக்கில் பறிமுதலான வெள்ளாட்டை காவல் நிலையத்தில் கட்டி வைத்து பராமரிக்கும் போலீஸ்
ஜப்பான் நிறுவனத்துடன் எய்ம்ஸ் நிதி ஒப்பந்தம் கையெழுத்தா?.. மத்திய, மாநில அரசுகள் தெளிவுபடுத்த கோரிக்கை
வடமாநிலங்களில் ஊரடங்கு: கோவை, திருப்பூர் மாவட்டத்தில் ரூ.100 கோடி காடா துணி தேக்கம்
கோவில்பட்டி அருகே கோயிலின் செம்பு கலசம் குளத்தில் வீச்சு: கொள்ளையடிக்கப்பட்டதா? போலீஸ் விசாரணை
வேதாரண்யத்தில் 9,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்
வெயில், பூச்சிகள் தாக்குதலால் மா விளைச்சல் கடும் பாதிப்பு: விவசாயிகள் கவலை
11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!!
சொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்!!
09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
எங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்!: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..!!