செய்யூர் அருகே நைனார் குப்பம் கிராமத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய அரசு பள்ளி: சுற்றுச்சுவர் இல்லாததால் மர்மநபர்கள் அட்டகாசம்
2020-08-08@ 08:11:01

செய்யூர்: செய்யூர் அருகே நைனார் குப்பம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலை பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது. செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சி நைனார் குப்பம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1 முதல் 8ம் வகுப்பு வரை 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளியில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் உள்ளன. ஆனால், பள்ளிக்கு சுற்றுச்சுவர் முழுமையாக அமைக்கப்படவில்லை. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பள்ளி நுழைவு பகுதியில் மட்டும் மதில்சுவர் எழுப்பி, நுழைவாயில் கதவுகள் பொருத்தப்பட்டது.
ஆனால், மற்ற 3 புறமும் திறந்தவெளியாக காட்சியளிக்கிறது. தற்போது, கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி மூடப்பட்டுள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட மர்மநபர்கள், இரவு மற்றும் பகல் நேரங்களில் பள்ளி வளாகத்துக்குள் நுழைந்து மது அருந்துதல், கழிப்பறைகளை அசுத்தம் செய்தல், பாலியல் விவகாரம் உள்பட பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இப்பள்ளிக்கு முழுமையாக சுற்றுச்சுவர் அமைக்கக்கோரி அப்பகுதி மக்கள், பல ஆண்டு கல்வித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் அதிகாரிகளோ, எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம், ஊரடங்கு முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன், இப்பள்ளிக்கு முழுமையாக சுற்றுச்சுவர் அமைக்க, சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வித்துறைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
மேலும் செய்திகள்
கிணத்துக்கடவுக்கு வராமல் பாதியில் திரும்பும் தனியார் டவுன் பஸ்கள்: பயணிகள் பரிதவிப்பு
வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தர்பூசணி வரத்து துவங்கியது: கடந்த ஆண்டைவிட வரத்து அதிகம்
கிராமப்புறங்களில் ரோட்டோரம் செயல்படும் அங்கன்வாடி மையங்கள்: சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
ஆழியார் சாலையில் ஒற்றை காட்டு யானை நடமாட்டம்: வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை
வத்தலக்குண்டு குளிப்பட்டி மருதாநதி ஆற்றில் மேம்பாலம் அமைக்கும் பணி மும்முரம்
சாணார்பட்டி பகுதியில் பூத்து குலுங்கும் மாம்பூக்கள்: அதிக மகசூல் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!