துபாயில் இருந்து வந்த மீட்பு பயணியிடம் 20 லட்சம் மதிப்பு தங்கம், வாட்ச் பறிமுதல்
2020-08-08@ 04:17:52

சென்னை: துபாயிலிருந்து கடந்த 2 தினங்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த சங்கர் (50) என்பவர், மீட்பு பயணியாக வந்தார். மருத்துவ பரிசோதனை முடிந்து அரசு இலவச தங்கும் விடுதியில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில், அவரது உடமைகள் அன்றைய விமானத்தில் வராமல் நேற்று அதிகாலை வந்த மற்றொரு மீட்பு விமானத்தில் வந்தது. சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் அந்த உடமைகளை சோதனையிட்டனர். அதனுள் ஒரு பேட்டரி பொம்மை காரில் இ வடிவத்தில் தங்க பிளேட்கள் இருந்தன.
அதன் மொத்த எடை 388 கிராம். அதோடு விலை உயர்ந்த 4 கைக்கடிகாரங்களும் இருந்தன. தங்கம் மற்றும் கைக்கடிகாரங்களின் சர்வதேச மதிப்பு 20 லட்சம். இவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் சங்கர் மீது வழக்குப்பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
திருமண தோஷங்களை நீக்குவதாக கூறி ரூ.92 லட்சம் மோசடி
போக்சோவில் டிரைவர் கைது
சொகுசு கார் திருட்டு
மர்ம கும்பல் சுட்டுக்கொலை மெக்சிகோவில் ரோட்டில் வீசப்பட்ட 10 சடலங்கள்
செயின் பறிப்பை தடுக்க முயன்ற பெண் படுகொலை: டெல்லியில் பரிதாபம்
சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி திரைப்பட இயக்குநர் ரூ.9.5 லட்சம் மோசடி: வாலிபர் புகார்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்