சாத்தூர் அருகே குடோனில் பயங்கர தீ; ரூ.20 லட்சம் தீப்பெட்டி பண்டல்கள் எரிந்து சாம்பல்: 6 வீடுகளும் சேதம்
2020-08-06@ 21:20:58

சாத்தூர்: சாத்தூர் அருகே தீப்பெட்டி குடோனில் நள்ளிரவு ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் எரிந்து சாம்பலாகின. 6 வீடுகளும் சேதமடைந்தன. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அய்யம்பட்டியைச் சேர்ந்தவர் மாரிச்சாமி (47). இவருக்கு சொந்தமான தீப்பெட்டி குடோன் சடையம்பட்டி கிராமத்தில் உள்ளது. இந்த குடோனில், சுற்றுவட்டார பகுதிகளில் தயாரிக்கப்படும் தீப்பெட்டி பண்டல்கள் சேமிக்கப்பட்டு வெளிமாநிலங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன. மின்கசிவு காரணமாக நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் இந்த குடோனில் தீப்பிடித்தது. சிறிதுநேரத்தில் தீ மளமளவென பரவி பற்றி எரிந்தது.
அருகில வீடுகளில் வசித்த மக்கள் அலறியடித்து கொண்டு வெளியேறினர். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சாத்தூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். 1 மணிநேரம் போராடியும் அணைக்க முடியவில்லை. சிவகாசி, விருதுநகர், வெம்பக்கோட்டையில் இருந்து கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு சுமார் 3 மணிநேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. இந்த தீவிபத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் எரிந்து சாம்பலாகின. குடோன் அருகில் இருந்த 6 வீடுகளும் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை. விபத்து குறித்து சாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
ஜப்பான் நிறுவனத்துடன் எய்ம்ஸ் நிதி ஒப்பந்தம் கையெழுத்தா?.. மத்திய, மாநில அரசுகள் தெளிவுபடுத்த கோரிக்கை
வடமாநிலங்களில் ஊரடங்கு: கோவை, திருப்பூர் மாவட்டத்தில் ரூ.100 கோடி காடா துணி தேக்கம்
கோவில்பட்டி அருகே கோயிலின் செம்பு கலசம் குளத்தில் வீச்சு: கொள்ளையடிக்கப்பட்டதா? போலீஸ் விசாரணை
வேதாரண்யத்தில் 9,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்
வெயில், பூச்சிகள் தாக்குதலால் மா விளைச்சல் கடும் பாதிப்பு: விவசாயிகள் கவலை
விண்ணம்பள்ளி அகத்தீஸ்வரர் கோயிலில் மூலவரை தரிசனம் செய்த சூரியபகவான்
11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!!
சொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்!!
09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
எங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்!: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..!!