பட்டுக்கோட்டை அருகே சாமி சிலைகளை விற்க முயன்ற 3 பேர் கைது
2020-08-03@ 14:37:09

பட்டுக்கோட்டை: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த புக்கரம்பை கிராமத்தில் சாமி சிலைகளை கடத்தி, அதை விற்க முற்படுவதாக பட்டுக்கோட்டை நகர போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்பி தேஷ்முக்சேகர்சஞ்சய் உத்தரவின்பேரில், பட்டுக்கோட்டை டி.எஸ்.பி. புகழேந்திகணேஷ் மேற்பார்வையில், நகர எஸ்.ஐ. தென்னரசு தலைமையில்,தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையானது கிடைத்த ரகசிய தகவலின்படி புக்கரம்பை கிராமத்திற்கு சென்றது. அங்கு சரவணன் என்பவரிடம் விசாரணை செய்தபோது அவர் கொடுத்த தகவலின்படி புக்கரம்பை கிராமத்தில் சுமார் 1 அடியில் நாராயணி சிலையும், முக்கால் அடியில் அனுமர் சிலையும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், இந்த 2 சிலைகளையும் விற்பதற்கு முற்படுவதும் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் சரவணனை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் அதே ஊரைச் சேர்ந்த பிரான்மலை, கரூர் மாவட்டம், குளித்தலை தாலுகாவை சேர்ந்த ஆண்டிச்சாமி என்கிற ராஜா ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 2 சுவாமி சிலைகளையும் மீட்டனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
மேலும் செய்திகள்
பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவது குறித்து அவதூறு வீடியோ பரப்பிய வாலிபர் சென்னையில் கைது: சைபர் க்ரைம் போலீஸ் நடவடிக்கை
இந்தியா- ஆஸ்திரேலியா ஒரு நாள் போட்டி கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்த 12 பேர் கைது: திருவல்லிக்கேணி போலீஸ் நடவடிக்கை
சென்னை புறநகர் பகுதி கடைகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது
புழல் சிறையில் போலி வக்கீல் கைது: போலீசார் விசாரணை
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு செல்போன் பறித்த வாலிபர் சிக்கினார்
மெரினா கடற்கரையில் கஞ்சா விற்ற வடமாநில வாலிபர்கள் சிக்கினர்
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!