தடை உத்தரவை மீறி கொடைக்கானல் வந்த நடிகர்கள் விமல், சூரி மீது போலீசார் வழக்குப்பதிவு
2020-07-29@ 00:26:13

கொடைக்கானல்: கொரோனா ஊரடங்கு காரணமாக, கொடைக்கானல் செல்ல தடையுத்தரவு அமலில் உள்ளது. ஆனால், தடையை மீறி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர்கள் விமல், சூரி மற்றும் சிலர் கொடைக்கானல் வந்துள்ளனர். தடை செய்யப்பட்ட பேரிஜம் வனப்பகுதிக்குச் சென்று ஏரியில் மீன் பிடித்துள்ளனர். தகவலறிந்த வனத்துறையினர் விமல், சூரிக்கு தலா ரூ.2,000 அபராதம் விதித்தனர். இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்கவே, வனத்துறை தற்காலிக வேட்டை தடுப்பு காவலர்கள் 3 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.
எனினும், கொடைக்கானல் நகருக்குள் இ-பாஸ் பெறாமல் வந்து சென்ற நடிகர்கள் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பேத்துப்பாறை பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர், கொடைக்கானல் போலீசில் புகார் அளித்திருந்தார். மேலும் நடிகர்களை அனுமதித்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க பல தரப்பினரும் குரல் எழுப்பினர். விசாரணையில் கொடைக்கானலுக்கு தடை உத்தரவு நேரத்தில் நடிகர்கள் இ-பாஸ் இல்லாமல் வந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து கொடைக்கானல் போலீசார், நடிகர்கள் விமல், சூரி ஆகியோர் மீது பிரிவு 270ன் படி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் செய்திகள்
மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் கைது-₹4.50 லட்சம் மதிப்பிலான 11 வாகனங்கள் பறிமுதல்
குலசேகரம், திருவட்டார் பகுதிகளில் போஸ்டர் ஒட்டி தேடிய பிரபல ரப்பர் ஷீட் திருடன் கூட்டாளிகளுடன் கைது-1,150 ரப்பர் ஷீட், 300 கிலோ பாத்திரங்கள் பறிமுதல்
கெங்கவல்லி அருகே வனப்பகுதியில் உடும்பு வேட்டையாடியவர் கைது-சிசிடிவி கேமரா மூலம் சிக்கினார்
செஞ்சி அருகே தகாத உறவால் கணவரை கொலை செய்ய முயற்சி-மனைவி, காதலன் கைது
புதுமாப்பிளை கொலை கோர்ட்டில் 2 பேர் சரண்
கோவை நீதிமன்றம் வளாகத்தில் மனைவி மீது ஆசிட் வீசிய கணவன்: வழக்கறிஞர்கள் குவிந்ததால் பரபரப்பு
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!