கோயில் அர்ச்சகருக்கு சரமாரி அடி உதை
2020-07-23@ 00:38:29

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த அரசர் கோயில் கிராமத்தில் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் நிலத்தில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் தங்கி, அர்ச்சகராக கண்ணன் பட்டாச்சாரியர் (40) பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை கண்ணன் பட்டாச்சாரியர், சாயங்கால பூஜைக்காக கோயில் நடையை திறந்து தீபாராதனை செய்து கொண்டிருந்தார். அப்போது, சகாய நகரை சேர்ந்த அந்தோணி செல்லம் உள்பட 2 பேர், கருவறையில் உள்ள மூலவர் சிலையை படம் பிடித்தனர். இதை பார்த்த அர்ச்சகர், அவர்களை தட்டிக்கேட்டார். இதனால், அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 2 பேர், கண்ணன் பட்டாச்சார்யரை, சரமாரியாக தாக்கி, பூணூலை அறுத்தனர். இதுகுறித்து கண்ணன் பட்டாச்சாரியார், படாளம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்தோணி செல்லம் உள்பட 2 பேரை, வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
சேலம்-விருத்தாசலம் பயணிகள் ரயில் இன்று முதல் தினமும் இருமுறை இயக்கம்
கொடைக்கானலில் மலர் கண்காட்சி நாளை துவக்கம்
விழுப்புரத்தில் பரபரப்பு கழுத்தை அறுத்து முன்னாள் கவுன்சிலரை கொல்ல முயற்சி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
ஓஎன்ஜிசி குழாய் உடைந்து கச்சா எண்ணெய் பரவியதால் 2 ஏக்கர் விவசாய நிலம் சேதம்
அழகர்கோவில் பகுதியில் மண்பானை தயாரிக்கும் பணி தீவிரம்
பஸ் கண்ணாடியை உடைத்து டிரைவர் கண்டக்டர் மீது தாக்குதல் : தொழிலாளிக்கு வலை
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை