CA படிப்பிற்கு இணையவழி வகுப்புகள் வரும் 22ம் தேதி தொடக்கம்!: இந்திய கணக்கு தணிக்கையாளர் அமைப்பு அறிவிப்பு
2020-07-20@ 16:11:09

சென்னை: சி.ஏ. எனப்படும் கணக்கு தணிக்கையாளர் படிப்பிற்கு இணையவழி வகுப்புகள் வரும் 22ம் தேதி தொடங்கவுள்ளதாக இந்திய கணக்கு தணிக்கையாளர் அமைப்பு அறிவித்துள்ளது. இந்திய பட்டய கணக்காளர் சங்கத்துடன் இணைந்து பள்ளிக்கல்வித்துறை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்கனவே சி.ஏ நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியை வழங்கி வருகின்றது. அதன்படி 22 மாணவர்கள் கடந்த ஜூன் 10ம் தேதி முதல் தங்களுடைய பயிற்சியை தொடங்கிய நிலையில், தேர்வு எழுத உள்ள மேலும் சில மாணவர்களுக்கு வருகிற 22ம் தேதி முதல் பயிற்சி தொடங்கப்பட உள்ளது .
இதை தொடர்ந்து, நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள CA தேர்வுக்கு தயாராகும் வகையில், அக்டோபர் மாதம் வரை இந்த வகுப்புகள் நடைபெறவுள்ளன. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் இலவசமாக இந்த வகுப்புகளில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. sirc.foundation@icai.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விவரங்களை அனுப்பி பதிவு செய்தால், இணையவழி வகுப்பில் சேர்வதற்கான வழிமுறைகள் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தனியார் பள்ளி மாணவர்கள் 9 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் செலுத்தி, இணையவழி வகுப்பில் சேரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு சுய தொழில் தொடங்க கடனுதவி; கலெக்டர் ஆர்த்தி தகவல்
தலித் கிறிஸ்தவர்கள் எஸ்சி பட்டியலில் சேர்க்க வேண்டும்
காஞ்சிபுரம் போக்குவரத்து மண்டலத்தில் முக்கிய வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்; பொதுமக்கள் வலியுறுத்தல்
சர்வதேச செஸ் போட்டிக்காக அமைக்கப்பட்ட தற்காலிக டேபிள், அரங்குகள் பிரிக்கும் பணி தீவிரம்
மின் கட்டண உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரத்தில் மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்பால் கழிவுநீர் குட்டையான ரங்கசாமி குளம் சீரமைக்க பொதுக்கள் கோரிக்கை
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!