கொரோனாவால் கொண்டாட்டங்கள் முடங்கிய நிலையில் பாரீசில் பாய்ந்தோடும் சீன் நதியில் சினிமா: சமூக இடைவெளியுடன் படகுகள் அமைத்து மகிழ்ச்சி
2020-07-18@ 21:49:49

பாரீஸ்: கொரோனா பரவல் அச்சுறுத்தலினால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ள சூழலில் பிரான்ஸ் தலைநகரான பாரீசில் பாய்ந்தோடும் சீன் நதியில் மிதக்கும் தியேட்டர் அமைக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் ேகாடை காலத்தில் ஆண்டு தோறும் ‘பாரீஸ் பிளேஜஸ்’ என்ற நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். கடந்த காலங்களில் சீன் நதிக்கரையை இந்த கொண்டாட்டங்களுக்கான இடமாக மாற்றி அமைத்துள்ளனர். தற்போது அந்நிகழ்வின் ஒரு பகுதியாக திறந்த வெளியில் மிதக்கும் தியேட்டர் அமைக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் உட்பட பல்வேறு நாடுகள் கொரோனா பிடியிலிருந்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப முயன்று வருகின்றன.
பிரான்சில் திரையரங்குகளும் திறக்கப்பட்ட நிலையில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்பதால் பாரீசின் எம்.கே-2 சினிமா நிறுவனம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையோடு, சீன் நதியில் மிதக்கும் தியேட்டரை அமைத்துள்ளது. இந்த மிதவை தியேட்டரில் சுமார் 38 படகுகள் பார்வையாளர்களுக்கான இருக்கைகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு படகிலும் நான்கு முதல் ஆறு பேர் வரை அமர்ந்து திரைப்படங்களை பார்க்கலாம்.
படகில் அமர்ந்திருப்பவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாகவோ அல்லது நண்பர்களாகவோ இருக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அது தவிர நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள நாற்காலியிலிருந்தும் படங்களை பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள இந்த தியேட்டரை ரசிகர்கள் விரும்பினால் நிரந்தரமாக அமைக்கவும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலுக்கு மத்தியில் மக்களின் பொழுதுபோக்கு கொண்டாட்டங்கள் முடங்கிய நிலையில், தற்போது புதுபுது ஐடியாக்களுடன் மக்கள் தங்களது மகிழ்ச்சி, உல்லாசங்களை அனுபவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
பாகிஸ்தானில் பயங்கரம்: பஸ் மீது லாரி மோதல் 18 பேர் பரிதாப பலி
பாகிஸ்தான் மசூதியில் 101 பேர் பலியான விவகாரம்: தாக்குதல் நடத்தியவர் அடையாளம் தெரிந்தது
சுற்றுலா பயணிகளை ஈர்க்க 5 லட்சம் பேருக்கு இலவச விமான டிக்கெட்டுகளை வழங்க ஹாங்காங் முடிவு
சிலி நாட்டில் வெப்பக்காற்று காரணமாக ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயில் 13 பேர் உயிரிழப்பு.! மேலும் பலர் காயம் என தகவல்
மெல்ல மெல்ல குறையும் கொரோனா: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 67.59 கோடியாக அதிகரிப்பு.! 67.69 லட்சம் பேர் உயிரிழப்பு
கடும் நெருக்கடிகளை தருகிறது ஐஎம்எப் மீது பாக். பிரதமர் குற்றச்சாட்டு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!