5.34 லட்சம் பேர் குணமடைந்தனர் கொரோனா தொற்று பாதிப்பு 8.5 லட்சத்தை நெருங்கியது
2020-07-13@ 00:41:16

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 8.5 லட்சத்தை நெருங்கியது. இதுவரை 5.34 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு, பலி எண்ணிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்டது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிதாக 28,637 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 8 லட்சத்து 49 ஆயிரத்து 553 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 3வது நாளாக தினசரி பாதிப்பு 26,000க்கும் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதே போல, 551 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 22 ஆயிரத்து 674 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 5 லட்சத்து 34 ஆயிரத்து 620 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 2 லட்சத்து 92 ஆயிரத்து 258 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைவோர் எண்ணிக்கை 62.93 சதவீதமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மேலும் செய்திகள்
‘மேடம் சீப் மினிஸ்டர்’ பட விவகாரம்; பாலிவுட் நடிகை மீது வழக்கு: அரியானா போலீஸ் நடவடிக்கை
கேரளாவில் மீண்டும் பறவை காய்ச்சல் பீதி
உடல்நலம் பாதிக்கப்பட்ட சசிகலா பெங்களூருவில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதி...! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
ஆணுறுப்பை தொட சொன்ன இயக்குனர்: பாலிவுட் கவர்ச்சி நடிகை ‘மீடூ’-வில் பரபரப்பு புகார்
75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்குள் ஒவ்வொரு குடும்பமும் சொந்த வீடு வைத்திருக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம் : பிரதமர் மோடி
வரும் 27ம் தேதி விடுதலை ஆக உள்ள நிலையில், சசிகலாவுக்கு மூச்சுத்திணறல்.... அதிர்ச்சியில் அமமுகவினர்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!