துபாயில் சிக்கிய 516 பேர் சென்னை திரும்பினர்
2020-06-20@ 02:32:37

சென்னை : துபாயில் சிக்கியிருந்த 516 பேர் சென்னை திரும்பினர். கொரோனா ஊரடங்கில் இந்தியாவை சேர்ந்த பலர் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கின்றனர். அவர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக துபாயில் சிக்கிய 516 இந்தியர்கள் 3 தனியார் விமானங்களில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்கள் பல்வேறு தனியார் தொழிற்சாலைகளில் பணியாற்றியவர்கள். இவர்களுக்கு குடியுரிமை, சுங்க சோதனை மட்டும் நடத்தப்பட்டன. மருத்துவ பரிசோதனை நடத்தவில்லை.
இதனால், பஸ்களில் ஏற்றப்பட்டு சென்னை ராயப்பேட்டை, மயிலாப்பூர், பெரிய மேடு, அமைந்தகரை, நுங்கம்பாக்கம், எழும்பூர், தி.நகர் ஆகிய இடங்களில் உள்ள தனியார் ஓட்டல்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தி தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், அனைவருக்கும் சென்னை மாநகராட்சி மருத்துவ குழுவினர் அவர்கள் தங்கும் இடத்துக்கு நேரில் சென்று கொரோனா மருத்துவ பரிசோதனை நடத்துவார்கள். அதை அரசு அதிகாரிகள் கண்காணிப்பார்கள். இவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள். தனிமைப்படுத்தும் காலம் முடிந்ததும் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
மேலும் செய்திகள்
வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம்: சென்னை பெருநகர போக்குவரத்து காவல் விழிப்புணர்வு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட, 13 பின்பிரிவு உதவி பொறியாளர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கினார் அமைச்சர் எ.வ.வேலு
சென்னையில் கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் 3வது நாளாக வேலைநிறுத்தம்: தொடரும் பேச்சுவார்த்தை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ120.75 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள தடுப்பு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
204-வது ஆண்டில் அடியெடுத்து வைத்த எழும்பூர் அரசு கண் மருத்துவமனை
பணியிடத்தில் உயிரிழந்த கட்டுமான தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு நிவாரணத் தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!