இந்து அறநிலையத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் பழமையான 100 திருக்கோயில் குளங்கள் சீரமைப்பு பணிகள் தீவிரம்: ஆணையரின் பொதுநிதியில் இருந்து ஒதுக்கீடு
2020-06-07@ 10:34:38

வேலூர்: வேலூர், காஞ்சிபுரத்தில் 7 கோயில் தெப்பக்குளங்கள் உட்பட மாநிலம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழமையான திருக்கோயில் தெப்பக்குளங்கள் சீரமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 44121 திருக்கோயில்கள், மடங்கள், அறக்கட்டளைகள், சமண கோயில்கள் உள்ளன. இதில் 1,586 கோயில்களுக்கு 1,359 குளங்கள் உள்ளன. இதில் 1,291 குளங்கள் நல்ல நிலையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கோயிலை விட்டு தள்ளி உள்ள 1,068 கோயில் குளங்கள் ஆக்கிரமிப்புகளின் பிடியில் சிக்கியும், தூர்ந்து போயும் உள்ளன. இக்குளங்களை மீட்டெடுத்து ஆணையரின் பொதுநல நிதியின் கீழ் புனரமைக்கும் பணி கடந்த 2002-2003ம் நிதி ஆண்டில் தொடங்கியது. இடையில் இப்பணிகள் நின்று போயிருந்த நிலையில் நடப்பு ஆண்டு மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
அதன்படி, வேலூர் இணை ஆணையர் மண்டலத்தில் திருவலம் வில்வநாதீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான அம்முண்டி அர்த்தநாரீஸ்வரர் கோயில், வள்ளிமலை சுப்பிரமணியசுவாமி கோயில் தெப்பக்குளங்கள் தலா ₹20 லட்சத்திலும், விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயில் தெப்பக்குளம் ₹80 லட்சத்திலும், காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோயில் குளம் ₹12 லட்சத்திலும், உத்திரமேரூர் சாவாக்கம் சொண்புரீஸ்வரர் கோயில், மதுராந்தகம் திருமலைவையாவூர் பிரசன்ன வெங்கடேசபெருமாள் கோயில் குளங்கள் ₹30 லட்சத்திலும், திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் சங்குதீர்த்தக்குளம் ₹60 லட்சத்திலும், ரிஷப தீர்த்தக்குளம் ₹45 லட்சத்திலும், ஆவடி திருவிளிஞ்சிப்பாக்கம் தேவி கருமாரியம்மன் கோயில் குளம் ₹25 லட்சத்திலும், பொன்னேரி அகத்தீஸ்வரர் கோயில் குளம் ₹20 லட்சத்திலும், காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் திருமேற்றளீஸ்வரர் கோயில் குளம் ₹12 லட்சத்திலும் சீரமைக்கப்படுகின்றன.
விழுப்புரம் மண்டலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் செஞ்சி நெடி கிராமம் அய்யனாரப்பன் கோயில் குளம், பையூர் தேவகீஸ்வரர் கோயில், செய்யாறு மாசிமக முதலியார் அறக்கட்டளை கோயில், வந்தவாசி வெடால் நீலகண்டேஸ்வரர் கோயில், மேல்மலையனூர் கெங்கபுரம் வரதராஜபெருமாள் கோயில், கள்ளக்குறிச்சி ராவதீரநல்லூர் சஞ்சீவிராயர் கோயில் குளங்கள் தலா ₹30 லட்சத்திலும், ஆரணி கோதண்டராமர் கோயில் குளம் ₹25 லட்சத்திலும், உளுந்தூர்பேட்டை ஆமூர் மார்கசகாயேஸ்வரர் கோயில் குளம் ₹45 லட்சத்திலும், கோலியனூர் புத்துமாரியம்மன் கோயில் குளம் ₹35 லட்சத்திலும் தூர்வாரப்படுவதுடன், சுற்றுச்சுவர், படிகள் சீரமைக்கப்படுகின்றன. இவ்வாறு மாநிலம் முழுவதும் 100 திருக்கோயில் திருக்குளங்கள் ₹20.62 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படுகின்றன.
மேலும் செய்திகள்
இலங்கை கடற்படையால் கொடூரமாக தாக்கப்பட்டு 4 மீனவர்களும் எரித்து கொலை: மீனவர் அமைப்புகள் கொதிப்பு; உடல்களை ஒப்படைக்க வலியுறுத்தல்; போராட்டத்தால் ராமேஸ்வரத்தில் பதற்றம்
தேனி கலெக்டருக்கு கொரோனா
ஆன்லைன் வர்த்தகத்தில் 35 லட்சம் கடன் காருக்குள் விஷம் குடித்து தொழிலதிபர் தற்கொலை
அவுட் சோர்சிங் முறையில் நடந்த மினி கிளினிக் பணியாளர் நியமனங்கள் ரத்து: ஐகோர்ட் கிளை அதிரடி
கட்டணம் குறைக்க கோரி 44வது நாளாக மாணவர்கள் போராட்டம்: அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி திடீர் மூடல்: விடுதிகளை காலி செய்யவும் உத்தரவு
சட்டம், விவசாயம் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி மையம்? தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!