கடந்த மாதம் ஆனந்த கண்ணீர்; இந்த மாதம் கண்ணீர்; சென்னையில் மானியமில்லா வீட்டு சிலிண்டர் விலை ரூ.37 உயர்வு... இல்லத்தரசிகள் வேதனை...!
2020-06-01@ 12:58:41

சென்னை: தொடர்ந்து மூன்று மாதங்கள் விலை குறைந்த நிலையில், சமையல் கேஸ் சிலிண்டர் விலை இந்த மாதம் உயர்ந்துள்ளது. தற்போது, ஒவ்வொரு வீட்டிற்கும் மானிய விலையில், ஆண்டிற்கு 12 காஸ் சிலிண்டர்கள் எண்ணெய் நிறுவனங்களால் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு மேல் கூடுதலான சிலிண்டர்கள் தேவைப்பட்டால், சந்தை விலை கொடுத்துதான் வாங்க வேண்டும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அந்நிய செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், சமையல் காஸ் சிலிண்டர் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன.
இந்நிலையில், கடந்த மார்ச் முதல் தொடர்ந்து 3-வது மாதமாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்த நிலையில், தற்போது சென்னையில் மானியமில்லா வீட்டு எரிவாயு சிலிண்டர் விலை ரூ.37 உயர்ந்துள்ளது. அதன்படி, இந்தியன் ஆயில் நிறுவனம் சென்னையில் மானியம் அல்லாத 14 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலையைக் கடந்த மாதத்தைவிட 37 ரூபாய் உயர்த்தி 606 ரூபாய் 50 காசுகளாக நிர்ணயித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மே மாதத்தில் ரூ.569.50-க்கு விற்பனை செய்யப்பட்ட சமையல் எரிவாயு இருந்த சிலிண்டர் விலை தற்போது ரூ.606.50 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனைபோல், டெல்லியில் மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 11 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து 593 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 31 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து 616 ரூபாயாக உள்ளது. மும்பையில் சமையல் எரிவாயு விலை 11 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து 590 ரூபாய் 50 காசுகளாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.15 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2-ல் வழித்தடம் 4-ல் மின்சாரம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.134.9 கோடி மதிப்பில் ஒப்பந்தம்
சென்னை - பெங்களூரு விரைவுச்சாலைக்கு நிலம் எடுப்பில் ரூ.100 கோடி மோசடி..? அதிர்ச்சி தகவல்..!
ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்ககளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
மாணவர்கள் சுய ஒழுக்கத்துடன் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்: கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!