முழு பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்படும்போது செலவு 3 மடங்கு அதிகரிக்கும்: போக்குவரத்து தொழிற் சங்கம் தகவல்
2020-05-12@ 19:49:02

சென்னை: தமிழக அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்கள் தினந்தோறும் 21,000 பேருந்துகளை இயக்குகிறது. இதில் 2.10 கோடி பயணிகள் பயணிக்கின்றனர். ஒரு பேருந்தில் ஒரு நேரத்தில் சட்டப்படி அனுமதிக்க வேண்டிய பயணிகள் எண்ணிக்கையை போல் 2 முதல் 3 மடங்கு வரை ஏற்றப்படுகிறது. அப்படி ஏற்றினாலும் வருவாயை விட பேருந்து இயக்க செலவு 1 கி.மீட்டருக்கு ரூ.30 முதல் ரூ.40 வரை அதிக செலவாகின்றது.
ஒரு பேருந்தில் 6 அடி சமூக இடைவெளியுடன் பயணம் செய்ய அனுமதித்தால் 25 பயணிகள் மட்டுமே அனுமதிக்க முடியும். அதற்குமேல் அனுமதித்தால் சமூக இடைவெளி குறைந்து நோய் தொற்று பரவும் அபாயம் உண்டு.
அரசு பேருந்துகள் இயக்க அனுமதிப்பது என்பது தமிழகத்தில் நோய் தொற்று மேலும் விரிவடைய காரணமாக இருந்துவிடக்கூடாது. நோய் தொற்றை தடுக்கும் வகையில் பேருந்துகளை இயக்க கழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி தேவையான ஏற்பாடுகளை செய்துகொண்டு முழுமையான பாதுகாப்புடன் இயக்க அனுமதிக்க வேண்டும்.
அவ்வாறு முழுமையான பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்படும்போது, கழகங்களின் வருவாய் பன்மடங்கு மேலும் குறைந்து, பேருந்து இயக்க செலவு 3 மடங்கு அதிகரிக்கும். இந்த அதிக செலவு நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும். பொருளாதார பரவலாக்கலுக்குமானது என்பதால், ஒட்டுமொத்த போக்குவரத்து கழகங்களின் செலவினத்தையும் மத்திய, மாநில அரசுகளே ஏற்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 55 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு!!
தா. பாண்டியனின் வாழ்க்கையும், அனுபவங்களும் இளம் தலைமுறையினருக்கு ஒரு பாடமாக அமையும் : முதல்வர் பழனிசாமி புகழஞ்சலி!!
அரசியல் களத்தில் மனதில் பட்டதை துணிச்சலாக பேசியும்,செயல்பட்டும் வந்தவர் தா.பாண்டியன்: ஓபிஎஸ், கமல், தினகரன் உள்ளிட்டோர் புகழாரம்!!
ஆஸ்கர் பந்தயத்தில் முன்னேறும் சூரரைப் போற்று... சிறந்த படம், நடிகர், நடிகை ஆகிய 3 பிரிவுகளில் பரிந்துரை: படக்குழுவினர் மகிழ்ச்சி!!
புடம் போட்ட தங்கம் போல் வாழ்ந்த பொதுவுடைமைப் போராளி இன்று நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்: தா.பாண்டியன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்
CM Helpline '1100' வாயிலாக 24 மணிநேரமும் மக்கள் தங்கள் குறைகளை பதிவு செய்யலாம் : ஆர்.பி.உதயக்குமார் தகவல்!!
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!