கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட போடி அகலரயில் பாதை பணி மீண்டும் தொடக்கம்
2020-05-12@ 12:20:43

ஆண்டிபட்டி: கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட மதுரை - போடி அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளதால், ஆண்டிபட்டி பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மதுரையில் இருந்து தேனி மாவட்டத்தில் உள்ள போடிக்கு கடந்த 2009 வரை பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் மூலம் தமிழகத்தின் எல்லைப்பகுதிகள், கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் விளையும் ஏலக்காய், காபி, தேயிலை ஆகிய பொருட்களை மதுரைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில், மதுரை - போடி மீட்டர்கேஜ் பாதையை, அகல ரயில் பாதையாக மாற்றுவதற்காக கடந்த 2010ல் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமல் சில ஆண்டுகள் பணிகள் கிடப்பில் போடப்பட்டன.
பின்னர் 2 ஆண்டுகளாக அகல ரயில் பாதை பணிகள் தீவிரமாக நடந்தன. முதற்கட்டமாக மதுரையிலிருந்து உசிலம்பட்டி வரை சுமார் 43 கிமீ தூரம் பணிகள் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. உசிலம்பட்டியிலிருந்து போடி வரையிலான அகல ரயில்பாதை அமைக்கும் பணி நடந்து வந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் மார்ச் 25 முதல் பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டதால் 48 நாட்களுக்கு பின், ஆண்டிபட்டி கணவாய் மலைப்பகுதியில் இருந்து ஆண்டிபட்டி வரை அகல ரயில்பாதை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. ரயில் தண்டவாளம் அமைப்பதற்காக மண்ணை கொட்டி சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும், ஓரிரு நாளில் கணவாய் மலைப்பகுதியில், மலைகளை குடைந்து பாதை அமைக்கும் பணிகள் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். மீண்டும் ரயில் பாதை பணிகள் தொடங்கியுள்ளதால், இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகள்
சிவகாசி அருகே மேலும் ஒரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து: இதுவரை 5 பேர் பலி; 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி.!!!!
தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் மருத்துவக் கல்வி பயில நடவடிக்கை: பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி.!!!
தமிழகத்தில் தொடரும் பட்டாசு ஆலை விபத்து... சிவகாசியில் மீண்டும் ஒரு வெடி விபத்து..: மீட்பு பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரம்
தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றி வருகிறது; சுற்றுச் சூழலை பாதிக்காத தொழில் வளர்ச்சிக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கும்: பிரதமர் மோடி பேச்சு
அரசு விழா,பாஜக பரப்புரை கூட்டத்தில் பங்கேற்க கோவை வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி..!!
கடலூர் பணிமனையில் தற்காலிக ஓட்டுநர் இயக்கிய பேருந்து, மற்றொரு பேருந்து மீது மோதி விபத்து: தற்காலிக ஓட்டுநர் தப்பி ஓட்டம்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்