கொரோனா பரிசோதனையில் வெளிப்படை தன்மை தேவை: பிரியங்கா டிவீட்
2020-04-26@ 12:52:46

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் மருத்துவ பரிசோதனை செய்வதில் வெளிப்படை தன்மை தேவை என காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தி உள்ளார். உத்தரப் பிரதேசத்தில் பொதுமக்களுக்கு கொரோனா நோய் தொற்று உள்ளதா என அரசு சார்பில் பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பரிசோதனை செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா தனது டிவிட்டர் பதிவில், ‘‘உத்தரப் பிரதேசத்தில் கொரோனா பரிசோதனை குறித்து பெரும்பாலான மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையில் வெளிப்படைத்தன்மை என்பது மிகவும் அவசியமாகும். ஒட்டு மொத்த சமூகம் மற்றும் அரசு ஒன்றாக இணைந்து கொரோனா நோய் பரவுவதை கட்டுப்படுத்த பணியாற்ற வேண்டும். கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்களுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் பரிசோதனை தொடங்கப்பட்டு மிகப்பெரிய அளவில் நடத்தப்படவேண்டும். கொரோனா குறித்த தரவுகளையும் உண்மையையும் மறைப்பது என்பது ஆபத்தானது.” எனக் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
தவறுதலாக எல்லை தாண்டிய குழந்தை: பாக். வீரர்களிடம் ஒப்படைப்பு
வெளிநாடுகளை சேர்ந்தவர்களிடம் இருந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ரூ.10 லட்சம் வரை நன்கொடை பெறலாம்: எப்சிஆர்ஏ சட்டத்தில் ஒன்றிய அரசு திருத்தம்
6 நாட்களுக்கு முன்பே தென்மேற்கு பருவமழை நாடு முழுதும் துவங்கியது
சுயநலத்துக்காக பயன்படுத்த பார்க்கும் அரசியல் கட்சிகள் அரசியல் சட்டத்துக்கு மட்டுமே உச்ச நீதிமன்றம் பதில் சொல்லும்: தலைமை நீதிபதி என்வி.ரமணா காட்டம்
பயணிகள் அலறல் 5000 அடி உயரத்தில் விமானத்தில் புகை: 15 நாளில் 5வது சம்பவம்
முதல்வர் பைரன் சிங் அதிர்ச்சி தகவல் மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கிய 80 பேரும் பலி: சடலங்கள் மட்டுமே மீட்பு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்