தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் லேசான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு
2020-04-12@ 21:51:39

டெல்லி: டெல்லியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகியுள்ளது. தலைநகர் டெல்லியில் இன்று மாலை 5.45 மணியளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்க அதிர்வுகள் நொய்டா, குர்கான், காசியாபாத், பரிதாபாத், கிரேட்டர் நொய்டா ஆகிய இடங்களில் உணரப்பட்டன. இது ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போது வணிக வளாகங்கள் மற்றும் வீடுகள் குலுங்கின மேலும் இந்த நிலநடுக்கம் கிழக்கு டெல்லியை மையமாகக் கொண்டு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் செய்வதறியாது தவித்துள்ளனர்.
144 தடை உத்தரவினால் மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் வெளியே வருவதற்கு முடியாமல் தவித்துள்ளனர். ஆனால் நில நடுக்கம் ஏற்படுத்திய அச்சத்தின் காரணமாக ஊரடங்கையும் மீறி மக்கள் பலர் வீதிகளில் வந்து குழுமியுள்ளனர். இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. மேலும் சில பகுதிகளில் மீட்பு பணிகளை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கம் குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள டெல்லி முதல்வர் ரவிந்த் கெஜ்ரிவால்; டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. அனைவரும் நலமாக இருப்பார்கள் என நம்புகிறேன். அனைவரின் நலனுக்காகவும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்’ என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
மின்சாரம், ரயில்கள், வேட்டை போன்றவற்றால் 3 ஆண்டுகளில் 274 யானைகள் பலி: மனித - விலங்கு மோதலால் 1,579 நபர்கள் மரணம்
ஓடிடி தளங்களில் படைப்பாற்றல் என்ற பெயரில் துஷ்பிரயோகம் செய்வதை பொறுத்துக்கொள்ள முடியாது: ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் பேட்டி
தேவையான இடம் கிடைத்த பிறகே பரந்தூர் விமான நிலையம் செயல்பாட்டுக்கு வரும் காலத்தை நிர்ணயிக்க முடியும்: ஒன்றிய அரசு விளக்கம்..!
தமிழகத்தில் 2,761 யானைகள் உட்பட நாட்டில் 29,964 யானைகள் உள்ளது: ஒன்றிய அரசு தகவல்
ஒன்றிய அரசின் மொத்தத் கடன் தொகை சுமார் ரூ.155.8 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது: மக்களவையில் ஒன்றிய நிதியமைச்சர் தகவல்
மூன்று மாதத்தில் ஆர்டிஐ இணைய தளங்களை உருவாக்க வேண்டும்: அனைத்து உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!