கோர தாண்டவம் ஆடி வரும் கொரோனா: உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 6,68,351ஆக அதிகரிப்பு: பலி எண்ணிக்கையில் இத்தாலி முதலிடம்
2020-03-29@ 15:54:57

பிரிட்டன்: உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31,020-ஆக அதிகரித்துள்ளது. 6,68,351 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,42,785 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக இத்தாலியில் 10,023 பேரும், ஸ்பெயினில் 5,982 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். னாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இப்போது 199 நாடுகளில் பரவி விட்டது. இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளை உலுக்கியுள்ள கொரோனா வைரஸ், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளையும் விட்டுவைக்கவில்லை.
கொரோனா வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன. கொரோனா வைரஸ் சீனாவில் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், பிற நாடுகளில் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதன் காரணமாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போதைய நிலவரப்படி அதிகமாக பாதித்த நாடுகளின் விவரம்;
இத்தாலி
இத்தாலியில் கடந்த 24 மணிநேரத்தில் 889 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 10,023 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இத்தாலியில் 92,472 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 12,000-க்கும் அதிகமானவர்கள் கோவிட் காய்ச்சலிலிருந்து குணமடைந்துள்ளனர். மேலும் இத்தாலியில் இதுவரை கோவிட்-19 காய்ச்சல் காரணமாக 51 மருத்துவர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா
உலக நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு அமெரிக்காவில் 1,23,780 பேர் பாதிக்கப்பட்டு முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,229-ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் முதன்முறையாக பிறந்து சில மாதங்களே ஆன குழந்தை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளது. அக்குழந்தை சிகாகோவில் உயிரிழந்ததாக இல்லினோயிஸின் பொது சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்தார். இதற்கு முன்னதாக சீனாவில் கொரோனா தொற்றால் கைக்குழந்தை ஒன்று உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்பெயின்
ஸ்பெயினில் 5,982 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78, 797 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 800 க்கும் மேற்பட்ட இறப்புகளைக் கண்டது. புதிய வழக்குகளின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது, ஒரே நாளில் 6,000 க்கும் சற்று அதிகமாகும்.
மேலும் செய்திகள்
பனிப்பாறைகள் உருகுவதை தடுக்க போர்வைகளை போர்த்தும் சீனா!!
உலக கொரோனா நிலவரம்: 20 லட்சத்தை தாண்டியது உயிரிழந்தோர் எண்ணிக்கை
அவசர கதியில் 6 மருத்துவமனை கட்டுகிறது மீண்டும் பரபரப்பாகிறது சீனா: தடுப்பூசிக்கும் அடங்காத கொரோனா வைரஸ்
அமெரிக்க அதிபராக பிடென் நாளை பதவியேற்பு: ராணுவ கட்டுப்பாட்டில் வாஷிங்டன்: 25,000 பாதுகாப்பு வீரர்கள் குவிப்பு
பலத்த பாதுகாப்புடன் அமெரிக்காவின் 46வது அதிபராக நாளை மறுநாள் ஜோ பிடன் பதவியேற்பு: வாஷிங்டனில் 25,000 தேசிய காவல்படை வீரர்கள் குவிப்பு
பாகிஸ்தான் அடிமைகளாக இருக்க விரும்பவில்லை: பிரதமர் மோடி படத்துடன் பேரணி நடத்திய சிந்து மாகாண மக்கள்.!!!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்