மதுரை கொரோனாவால் ஒருவர் உயிரிழப்பு : தாய்லாந்து குழுவுடன் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்றதுதான் தொற்றுக்கு காரணம்
2020-03-25@ 11:23:01

மதுரை : கொரோனாவுக்கு உயிரிழந்த மதுரை நபர் வெளிநாடோ,வெளிமாநிலமோ சென்றதில்லை என்றாலும் தமிழ்நாட்டில் சமூக பரவல் தொடங்கவில்லை என்று அரசு உறுதிப்பட கூறியுள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழந்த மதுரை நபர் கட்டிட கான்டராக்டர் ஆவார். மசூதி நிர்வாகியாக இருந்த வந்த அவர், அண்மையில் தாய்லாந்தில் இருந்து ஈரோடு வந்த குழுவினருடன் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். தாய்லாந்து குழுவில் 2 பேருக்கு ஏற்கனவே கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதால் அவர்களிடம் இருந்து இவருக்கும் கொரோனா பரவி இருக்கலாம் என்று தெரிகிறது.
வெளிநாடோ, வெளிமாநிலமோ சென்றதில்லை என்றாலும் வெளிநாட்டினருடன் நேரடி தொடர்பில் இருந்ததே மதுரை நபருக்கு கொரோனா பரவியுள்ளது. ஆகவே தமிழ்நாட்டில் கொரோனா சமூகப் பரவல் தொடங்கவில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிப்பட தெரிவித்துள்ளார். மதுரை நபரை சந்தித்தவர்கள், அண்டை வீட்டார், கொரோனா உறுதி செய்யப்படாத நிலையில், சிகிச்சை அளித்த தனியார் மருத்துவர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் அவரவர் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு உயிரை பறிகொடுத்தவர் வசித்த தெரு, சென்று வந்த வழிப்பாட்டுத் தளம், அவர் நடமாடிய இடங்கள் அனைத்திலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
மூணாறில் நிற்காமல் கொட்டுது கனமழை சாலைகளில் மண் சரிந்து போக்குவரத்து துண்டிப்பு
பென்னாகரம் அருகே கிராமத்திற்குள் புகுந்த யானைகள்: வனத்துறையினர் விரட்டியடித்தனர்
உண்டியல் பணத்தை திருட முயற்சி தடுத்தவருக்கு கடப்பாரை அடி; காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் கைது
வால்பாறையில் தொடரும் கனமழை மண்சரிவு; வீடுகள் இடிந்து சேதம்: நகராட்சி கமிஷனர் உயிர் தப்பினார்
சென்னைக்கு கடத்த முயன்றபோது மினி வேனுடன்; ரூ. 5 லட்சம் குட்கா பறிமுதல்
பந்தலூர் அருகே உணவு தேடி வந்து வீட்டை சூறையாடிய காட்டு யானை: மக்கள் அச்சம்
கிழக்கு உக்ரைனில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தும் ரஷ்யப்படை... ஒரேநாளில் 12 பேர் பலியான சோகம்
சோமாலியாவில் தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்.. பசி பட்டினியுடன் மக்கள்!!
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!