நத்தம் பகுதியில் வறட்சியால் மாற்று தொழிலில் இறங்கிய விவசாயிகள்
2020-03-05@ 20:43:00

நத்தம்: நத்தம் பகுதிகளில் வறட்சி காரணமாக விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்கள் உரித்த தேங்காய் மட்டைகளை நறுக்கி, அலங்கார பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்துக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த கிராமமக்கள் பெரும்பாலும் விவசாயத்தை நம்பியே உள்ளனர். இப்பகுதிகளில் சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து வருவதால், ஆழ்குழாய் கிணறுகளை அமைத்து அவற்றின் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது வடகிழக்கு பருவ மழை பொய்த்து போனதால், நிலத்தடி நீர்மட்டம் அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டது.
இதனால் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் அலங்கார பொருட்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு உரித்த தேங்காய் மட்டைகளை சிறுதுண்டுகளாக்கி, அவற்றை காய வைத்து கொடுக்கும் பணியில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அப்பகுதியை சேர்ந்த ஆனந்தி என்ற விவசாயி கூறுகையில், ‘‘இப்பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. தற்போது வறட்சி காரணமாக வனப்பகுதியிலிருந்து வெளியேறும் காட்டு மாடுகள் விளைபொருட்களை அழித்து விடுகின்றன. இதனால் இப்பகுதி விவசாயிகளுக்கு, விவசாயத்தில் ஆர்வம் குறைந்து வருகிறது.
இருப்பினும் உணவு, பொருளாதார தேவைகளுக்காக பல்வேறு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அலங்கார பொருட்கள் செய்யும் நிறுவனத்திற்கு தேங்காய் மட்டைகளை நறுக்கி கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். நறுக்கி கொடுக்கும் தேங்காய் மட்டைகளுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.50 வரை கூலியாக தருகின்றனர். ஒருநாளைக்கு சராசரியாக 50 கிலோ வரை ஒருநபர் நறுக்கலாம். மழை குறைந்ததால் இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளோம்’’ என்றார்.
மேலும் செய்திகள்
ஓட்டுக்கு பணம் வாங்கவில்லை என வாக்காளர்களிடம் சத்திய பிரமாணம் வாங்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது: உயர்நீதிமன்றம்
27 மணி நேரம்..195 நாடு!: பென்சில் முனையில் உலக நாடுகளின் பெயர், தலைநகரங்களை செதுக்கி கல்லூரி மாணவி சாதனை..!!
பவானியில் செல்லியாண்டி அம்மன் கோவில் திருவிழா: பக்தர்களே கருவறைக்கு சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் நிகழ்வு
தேர்தல் பறக்கும்படை அதிரடி!: கடலூரில் உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.51 லட்சம் பறிமுதல்..!!
மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்: மாவட்ட செயலாளர் க.சுந்தர் வழங்கினார்
பைக் விபத்தில் போலீஸ்காரர் பலி
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்