டிக்டாக் வீடியோ எடுத்தபோது விபரீதம் 25,000 வோல்ட் மின்சாரம் பாய்ந்து வாலிபர் கருகி பலி
2020-03-04@ 00:09:47

பானிபட்: மின்கம்பத்தில் ஏறி டிக்டாக் வீடியோ எடுக்க முயன்ற வாலிபர், 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உடல்கருகி பலியானார். அரியானா மாநிலம் தரம்கர் கிராமத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் விகாஸ். இவர் அப்பகுதிக்கு அருகே இருக்கும் மாத்லோதா ரயில் நிலையத்துக்கு நண்பர்களுடன் நேற்று முன்தினம் மாலை சென்றார். அப்போது நண்பர்கள் இடையே டிக்டாக் செயலிக்காக வீடியோ எடுப்பது தொடர்பான யோசனை தோன்றியது.
இதில் விகாஸ் உடனடியாக அருகில் இருந்த மின்கம்பத்தில் ஏறி டிக்டாக்கிற்காக வீடியோ எடுக்க தொடங்கினார். அப்போது மின்கம்பத்தின் மேலே இருந்த 25,000 வோல்ட் மின்கம்பியில் இருந்து, மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உடல்கருகி உயிரிழந்தார். இதனை மின்கம்பத்தின் கீழே நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த நண்பர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விகாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
உத்தர பிரதேசத்தில் திடீர் திருப்பம்… மாட்டேன் என்ற யோகி அரசு ஜகா வாங்கியது… வாரஇறுதி லாக்டவுன்-ஐ உறுதி செய்தது!!
நடிகை சஞ்சனா கல்ராணிக்கு கொரோனா
கொரோனா சிகிச்சைக்கு ராணுவம் உதவ வேண்டும்: ராஜ்நாத் சிங் வேண்டுகோள்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு தேவை இல்லை: பிரதமர் மோடி அறிவிப்பு
கும்பமேளாவுக்கு வந்த மாஜி மன்னருக்கு தொற்று
ராகுலுக்கு தொற்று உறுதி
இன்றைய சிறப்பு படங்கள்
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!
ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!
எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!
கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்