அடுத்தடுத்து 2 எம்எல்ஏக்கள் மரணமடைந்த நிலையில், நாளை நடைபெறவிருந்த திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து!
2020-02-28@ 12:01:19

சென்னை: அடுத்தடுத்து இரண்டு திமுக எம்எல்ஏக்கள் மரணம் அடைந்த நிலையில், நாளை நடைபெறவிருந்த திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பில், திமுக நாடாளுமன்ற உறுப்பினா்கள் கூட்டம் பிப்ரவரி 29ம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். கூட்டத்துக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமை வகிப்பார். இந்த கூட்டத்தில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள் தவறாது பங்கேற்க வேண்டும் என்று அறிவித்திருந்தார். ஆனால், திருவொற்றியூர் திமுக எம்.எல்.ஏ கே.பி.பி.சாமி உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.
அவருக்கு கட்சியினர் திரளாக சென்று அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் அடுத்த நாளே மற்றொரு எம்.எல்.ஏ காலமாகி இருப்பது அக்கட்சியினரிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் தமிழக சட்டமன்றத்தில் திமுக எம்.எல்.ஏக்களின் பலம் 98ஆக குறைந்துள்ளது. அடுத்தடுத்து திமுக எம்எல்ஏக்கள் இரண்டு பேர் மரணம் அடைந்த நிலையில் நாளை நடைபெறவிருந்த எம்.பி.க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், நாளை திட்டமிட்டபடி அண்ணா அறிவாலயத்தில், திமுக எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்துவது சரியாக இருக்காது என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கருதியுள்ளார். எனவே, பின்னொரு நாளில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்
பொம்மை அதிமுக அரசு : திருநாவுக்கரசர் தாக்கு
பாஜவுக்கு போய் வந்தவருக்கும் சீட் இல்லை.. பாஜவுக்கு போனவருக்கும் தொகுதி இல்லை : அமைச்சர் கறார்
நாடாளுமன்ற தேர்தலைப் போல் சட்டமன்ற தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றி : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி
அதிமுக. ஆட்சியை மாலுமி இல்லாத கப்பல் போலவும், அதிமுக. அமைச்சர்களை கடல் கொள்ளைககாரர்கள் போலவும், மக்கள் கருதுகிறார்கள் : மு.க.ஸ்டாலின் பேட்டி
திமுக தேர்தல் அறிக்கை குழு பொதுமக்களிடம் குறைகேட்பு கூட்டம்: டி.ஆர்.பாலு தலைமையில் நடந்தது
கொத்தவால்சாவடியில் ரேஷன் கடைக்கு பூமி பூஜை: தயாநிதி மாறன் எம்பி தொடங்கி வைத்தார்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்